TTV Dhinakaran:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் வாபஸ்: டிடிவி தினகரன் சொன்ன காரணம் என்ன?
வேட்பாளர் அறிவித்த நிலையில், தற்போது அமமுக போட்டியிடாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்காத காரணத்தால் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு , அமமுக சார்பாக வேட்பாளர் அறிவித்த நிலையில், தற்போது போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது அமமுக தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவுக்கு சாதகம்:
இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது
இந்நிலையில், வேட்பாளர் அறிவித்தும், போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது, வேண்டும் என்றே அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியிருந்தாலும், இது அதிகமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















