மேலும் அறிய

ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்

ECI Rahul Gandhi: ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ECI Rahul Gandhi: வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை, தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் பதிலடி:

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி பற்றிய குற்றச்சாட்டுகளை,  தவறானவை என்று குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. கையொப்பமிடப்பட்ட பிரகடனத்துடன் குற்றச்சாட்டுக்கான ஆவணங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டுச் சேர்ந்து வாக்குகளை திருடுவதாகவும், இது அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

அவரது கருத்துகள் தொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b) இன் ராகுல் காந்தியிடம் முறையான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். குறிப்பாக கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி, ராகுல் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் வியாழக்கிழமை மாலைக்குள் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இதுதொடர்பான கடிதத்தில், ”மாநில தேர்தல் அதிகாரி, நீக்கப்பட்ட அல்லது தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களைப் பட்டியலிடுமாறும், இந்தத் தகவலை அவர் நேரில் பெற்றாரா அல்லது வேறு மூலத்தின் மூலம் பெற்றாரா என்பதை தெளிவுபடுத்துமாறும்” மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டார்.

பல ஊடக அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ECI வட்டாரங்களின்படி, வரைவு வாக்காளர் பட்டியல்கள் நவம்பர் 2024 இல் காங்கிரஸுடனும், இறுதி வாக்காளர் பட்டியல்கள் ஜனவரி 2025 இல் பகிரப்பட்டன. இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் மாவட்ட அல்லது மாநில அளவில் காங்கிரஸால் முறையான மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என்பதை ஆணையம் விளக்கமளித்துள்ளது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் என்ன?

கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கிடைத்த தகவல்களை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். அதன்படி, போலி பதிவுகள், போலி முகவரிகள், மொத்தப் பதிவுகள், செல்லாத புகைப்படங்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 ஐ தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் 1,00,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் ஒரு பெரிய குற்றவியல் மோசடி நடைபெற்று வருவதை நாடு அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது தேர்தல் ஆணையத்தாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியாலும் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

பாஜக சொல்வது என்ன?

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.   மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “சித்தாந்த ரீதியாக வெற்றுத்தனமான காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த திட்டமிட்ட ஏமாற்றத்தின் பின்னணியில் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு பெரிய சதி இருப்பதை நிராகரிக்க முடியாது” என பேசியுள்ளார். பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், ”ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை மோசடி என்று கூறியதன் மூலம் வெட்கமின்மையின் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டார்" என்று சாடினார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் ராகுல் காந்தியின் கருத்துக்களை ஆதாரமற்றவை என்று நிராகரித்தனர், தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அவர் அடிக்கடி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறினர்.

ராகுல் காந்தி பதில்:

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரக் கோரிக்கையை நிராகரித்த ராகுல் காந்தி,  தனது பொது அறிக்கைகளையே சத்தியப்பிரமாணமாக எடுத்துக்கொள்ளலாம்," என்று விளக்கமளித்துள்ளார். உண்மையைப் பேசுவதால் தேர்தல் ஆணையம்  அவரைத் தாக்க மிகவும் பயப்படுகிறது என்றும் கூறினார். குற்றத்திற்கான சான்றுகளான சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல்களை தேர்தல் ஆணையம் அழித்து வருவதாகவும் சாடியுள்ளார். இதனிடையே மோசடிக்கு எதிராக பெங்களூரு சுதந்திர பூங்காவில் இன்று நடைபெறும் போராட்ட பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்க உள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget