மேலும் அறிய

Edappadi Palanisami: "38 திமுக எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்?” : நிலக்கரி சுரங்க விவகாரத்தில் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு ஏலம் கோரியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி வந்தபோது நீங்களெல்லாம் எப்படி அதிர்ச்சி ஆனீர்களோ, அதேபோல நானும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.  நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாகாரன் எனவே இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதில் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பேன் என தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைக்கு மத்திய அரசு 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கிட்டதட்ட 105 கிராமங்களில் நிலக்கரி எடுத்து விட்டது. அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதி விவசாயிகளை அப்புறப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய நிலக்கரி சுரங்கம் தொடர்பான அறிவிப்பு அவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆகிய 3 இடங்களில் நிலக்கரி சுரங்கர், டெண்டருக்கான அறிவிப்பு வந்துள்ளது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அறிவித்தது. அதில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது என்பது தான் வேளாண் பாதுகாப்பு சட்டத்தில் முக்கிய அம்சம். 

ஆனால் இந்த சுரங்கம் தொடர்பான திட்ட அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதிலில் தெரிய வந்தது. ஆனால் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு தவறி விட்டது. தமிழ்நாட்டில் திமுக  ஆட்சியில் தான் விவசாயிகள் பாதிக்கும் திட்டம் தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது மத்திய அரசுக்கு உட்பட்ட பிரச்சினை. அதனால் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நமது வாழ்வாதார பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய முழு மூச்சோடு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 உறுப்பினர்களும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு பேச வேண்டியதை இங்கு பேசி என்ன பயன்? என சரமாரியாக எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
புத்தாண்டு காலையிலேயே சிலிண்டர் விலை கிடு கிடுவென உயர்வு.! 110 ரூபாய் அதிகரிப்பால் அதிர்ச்சி
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
Car Price Hike: இன்று முதல்.. ஹுண்டாய் To ஹோண்டா.. விலையை ஏற்றிய ப்ராண்ட்கள், எந்த காருக்கு எவ்வளவு உயர்வு?
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
Happy New Year 2026: Confident- ஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. 2026 வெற்றி நிச்சயம் மக்களே!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மழை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Upcoming MPVs: குடும்பமா போக.. தரமா, வசதியா, சொகுசா வரும் 5 புதிய எம்பிவிக்கள் - பட்ஜெட்& ப்ரீமியம், ICE & EV
Embed widget