மேலும் அறிய

Edappadi Palanisami: "38 திமுக எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்?” : நிலக்கரி சுரங்க விவகாரத்தில் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு ஏலம் கோரியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி வந்தபோது நீங்களெல்லாம் எப்படி அதிர்ச்சி ஆனீர்களோ, அதேபோல நானும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.  நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாகாரன் எனவே இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதில் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பேன் என தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைக்கு மத்திய அரசு 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கிட்டதட்ட 105 கிராமங்களில் நிலக்கரி எடுத்து விட்டது. அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதி விவசாயிகளை அப்புறப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய நிலக்கரி சுரங்கம் தொடர்பான அறிவிப்பு அவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆகிய 3 இடங்களில் நிலக்கரி சுரங்கர், டெண்டருக்கான அறிவிப்பு வந்துள்ளது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அறிவித்தது. அதில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது என்பது தான் வேளாண் பாதுகாப்பு சட்டத்தில் முக்கிய அம்சம். 

ஆனால் இந்த சுரங்கம் தொடர்பான திட்ட அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதிலில் தெரிய வந்தது. ஆனால் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு தவறி விட்டது. தமிழ்நாட்டில் திமுக  ஆட்சியில் தான் விவசாயிகள் பாதிக்கும் திட்டம் தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது மத்திய அரசுக்கு உட்பட்ட பிரச்சினை. அதனால் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நமது வாழ்வாதார பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய முழு மூச்சோடு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 உறுப்பினர்களும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு பேச வேண்டியதை இங்கு பேசி என்ன பயன்? என சரமாரியாக எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
Embed widget