மேலும் அறிய

இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - வைகோ

”இந்தியையும், இந்துத்துவா சக்தியையும் நிலை நாட்டுவதற்கு செயல்பட்டு வரும் சூழலில் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது அதற்கு தமிழகம் இடம் தராது - வைகோ”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நடைபெற்ற தனது உதவியாளரான சாரதி பிசி.துரை என்பவரின் இல்ல மணவிழாவில் நேரில் கலந்து கொண்டார். முன்னதாக வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் போட்டுள்ளார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என்று அவர் சொல்வதைப் போல சாதித்து வருகிறார். எனவே தமிழகத்தில் கருணாநிதிக்கு பிறகு பொற்கால ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தியாகராயர் ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கோட்டையை ஆதிக்க சக்திகள் சங்பரிவார் சக்திகள் சிதைக்க பார்க்கிறார்கள். இந்தி சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.


இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - வைகோ

அண்மையில் இந்தூரில் 75 ஆண்டு கால சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாஜகவுக்கு பின்னால் இருந்து செயல்படும் சங்பரிவார் அமைப்புகள், இந்துத்துவா அமைப்புகள் ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைக்கார கொடியவன் கோட்சேவின் உருவத்தை வைத்து வாழ்க வாழ்க என முழக்கம் எழுப்பினர். இதைவிட கொடுமை எதுவும் இருக்காது. மகாத்மா காந்தி உலகத்துக்கே வழிகாட்டிய தலைவர் அவரை சுட்டுக்கொன்றவருக்கு விழா எடுக்கும் கூட்டத்தினர் தமிழக உள்பட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இந்தி சமஸ்கிருதத்தை திணித்து, மாநில உரிமையும் சிதைக்க முயற்சிக்கின்றனர். எனவே தான் இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.

நம் முன்னோர்கள் நூறாண்டு காலம் ரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி உருவாக்கிக் கொடுத்த திராவிட இயக்கக் கோட்டையை பாதுகாப்பதன் மூலம் திராவிட மாடல் ஆட்சியே அதற்கு அரணாக இருக்கும் அதன் மூலம் இந்துத்துவா சக்தியை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த உணர்வோடு தான் தமிழ்நாட்டில் அவர்கள் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் இது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை. கண்ணீரும் வியர்வையும் கொட்டி எழுப்பப்பட்ட அரண் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். நமது பிரதமர் மிக சாதுரியமானவர். மகா கட்டிக்காரர். அவர் இங்கே வந்து திருவள்ளுவரை பாரதியாரை பேசுகிறார். ஆனால் வடக்கே சென்றால் இந்தியில் தான் பேசுகிறார். அவர் இந்தியையும், இந்துத்துவா சக்தியையும் நிலை நாட்டுவதற்கு செயல்பட்டு வரும் சூழலில் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது அதற்கு தமிழகம் இடம் தராது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பேசும்போது, துப்பாக்கிச் சூடு நடந்த அன்று நான் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என கதறினார்கள். தற்போது ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஒரு படுகொலை என்பது இந்த அறிக்கையே சாட்சியமாகும் என்று வைகோ தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget