மேலும் அறிய

Devendra Fadnavis: அஜித் பவார் சரத் பவாரை எதிர்த்தது ஏன்? - உண்மையை உடைத்த தேவேந்திர ஃபட்னாவிஸ்

ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சர், தேவேந்திர ஃபர்னாவிஸ் சமகால அரசியல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

 அதில் அவர், “வரும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை என்று கூறமாட்டேன். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் பெற்ற இடங்களுக்குக் குறையாது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் வென்ற மக்களவை தொகுதிகளைவிடவும், இம்முறை நாங்கள் வெல்லும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது” எனக் கூறியுள்ளது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

வரும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் எத்தனை இடங்களை பெறுவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், ”மகாராஷ்டிரா லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால்கள் இல்லை என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் . கடந்த இரண்டு தேர்தல்களிலும் 48 மக்களவைத் தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது அதற்கு மேல் வெல்ல வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். எங்களது நோக்கம் கடந்த முறை வென்றதை விடவும் அதிகமாக வெல்வதுதான். ஆனால் கடந்த இரண்டு தேர்தலில் நாங்கள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறையாது என உறுதியாக கூறுகின்றேன். 

ஒவ்வொரு அரசாங்கமும் செயல்படும் முறை உண்டு. கடந்த அரசாங்கத்தில் நான் முதலமைச்சராக இருந்தேன். அந்த நேரத்தில் எனது உரிமைகளும் வேலை செய்யும் திறனும் வேறு. இப்போது துணை முதலமைச்சராக இருந்தாலும், முன்பு நடத்திய அதே நிகழ்ச்சி நிரலையே என்னால் இயக்க முடியும். நான் எடுக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எப்போதும் ஒத்துழைக்கிறார். எனது அதிகாரங்கள் துணை முதலமைச்சருக்கானதுதான் என்றாலும், தற்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும்” என்றார்.  

 2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சரத் பவாருடனான அரசியல் பேச்சுவார்த்தைகளை தேவேந்திர ஃபட்னாவிஸ் பகிர்ந்து கொண்டார். அப்போது ”சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். சரத் ​​பவார் பின்னர் அஜித் பவாரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். அஜித் பவாருடன் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது, அதற்கு சரத் பவார் ஒப்புதல் அளித்தார். ஆனால், வழக்கம் போல், கடைசி நேரத்தில் சரத் பவார் பின்வாங்கினார். என்னை ப்ரோமோட் செய்து எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு இப்போது சரியான நேரத்தில் பின்வாங்குவது அஜித் பவாருக்கு பிடிக்கவில்லை. பாஜகவுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது என்று சரத் பவாரிடம் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார். மற்ற என்சிபி எம்எல்ஏக்களும் எங்களுடன் சேர விரும்பினர். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கூட்டணியில் நீடிக்க முடியவில்லை. அதனால்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவராக ஆனேன்” எனக் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget