மேலும் அறிய

போதை பொருள் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அண்ணாமலை பதில் சொல்லவேண்டும் - செல்வ பெருந்தகை

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானலும் இங்கு போட்டியிடலாம். ஆனால் பாஜகவிற்கு இங்கு இடமில்லை. தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக போவார்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு மாநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”இந்த தேர்தல் தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போர். யார் ஆள வேண்டும், யார் ஆளக்கூடாது என்பதை இந்திய தேச மக்கள் தீர்மானித்துள்ளனர். அதன் அடிப்படையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து மாவட்ட மண்டல தலைவர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், தமிழகத்தின் பேரிடருக்கு மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு நயா பைசா கூட மோடி அரசு கொடுக்கவில்லை, எதற்காக கோடி தமிழ்நாட்டை ஓரம் கட்டிவிட்டு வஞ்சித்து விட்டு வாக்கு சேகரிக்க வருகிறார். தமிழக மக்கள் ஒருபோதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஐ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது சமூக நீதிக்கான மண். அவரை புறம் தள்ளுவார்கள் என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர்,  போதை பொருட்களை பற்றி அண்ணாமலை பேசி வருகிறார்,  இதன் தலைவர்கள் யார்? யார்? எந்த துறைமுகத்திலிருந்து எந்த துறைமுகத்திற்கு இது கைமாற்றப்படுகிறது? 

குஜராத் மாநிலம் முந்த்ரா, காண்ட்லா ஆகிய துறைமுகம் வழியாக தான் தமிழகத்துக்கு போதை பொருட்கள் வருகிறது. இதுவரை அங்கிருந்து 1000 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கிருஷ்ணா பட்டினம் துறைமுகத்திற்கு வந்து அங்கிருந்து தமிழகம் வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு இதுவரை ஜிஎஸ்டியில் எவ்வளவு பணம் கொடுத்துள்ளீர்கள்? வெள்ளை அறிக்கை கொடுக்க தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.  

தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதி? குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி என பாஜக அரசு செயல்படுகிறது. இது தேசத்திற்கு விரோதமான செயல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர்மாறாக விரோதமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார், மீனவர்களை பாதுகாப்போம் என்றார்கள்.  ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படகுகள்  இலங்கையால் பறிமுதல் செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத  மாநிலங்களில் மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்படுகிறார்கள். பாஜகவில் தேர்தலில் போட்டியிட ஆளில்லை. பகவான் சிங் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் ஆகியோர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விலகி விட்டார்கள்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எங்கள் பலம் எவ்வளவு என்று எங்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் இனிப்பான செய்தி இன்னும் இரண்டு நாட்களில் கிடைக்கும். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானலும் இங்கு போட்டியிடலாம். ஆனால் பாஜகவிற்கு இங்கு இடமில்லை. தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக போவார்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக அவர் கூட்டத்தில் பேசுகையில், தமிழகத்தில் தொன்மையான பொருநை நாகரீகத்தை கொண்ட திருநெல்வேலி மாவட்டம் முதன்மையாக இருக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மோடி எதற்காக தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். திருவள்ளுவர் பற்றி பேசுகிறார், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். ஜெயலலிதாவை புகழ்ந்து அதிமுக வாக்கு வங்கியை பெற நினைக்கிறார். அதே மேடையில் இருக்கும் ஒருவர் ஜெயலலிதாவை இகழ்ந்து பேசுகிறார். நாட்டில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் திறக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

பாஜக ஆட்சியில் பட்டியல் இன மக்கள் மீது வழக்குகள் 44.8% அதிகரித்துள்ளது. சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழவில்லை. சிஐஏ போன்ற சட்டங்களை கொண்டு வருவார்கள் என ஒரு அச்சத்தோடு வாழ்கிறார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் சிறு சிறு தவறு செய்தால் கூட இந்த இயக்கத்தை வளர்த்தவர்களின் ஆன்மாக்கள் அவர்களை மன்னிக்காது  என பேசினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Embed widget