மேலும் அறிய

Anbumani Ramadoss ; ”தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்! சாதி வாரி எப்போ நடத்த போறீங்க..” அன்புமணி வார்னிங்

Anbumani Ramadoss : "69 %இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்றால் முதலில் சென்னையில் போராட்டம் பிறகு தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அன்புமணி எச்சரிக்கை.

அன்புமணி ராமதாஸ் பேச்சு

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், 
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி ,இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின்  தலைவர்கள் பங்கேற்று மேடையில் பேசினர். 

இறுதியாக மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

 "இங்கு மேடையில் உள்ள நாங்கள் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துக்கள் கொண்டு இருந்தாலும் சமூகநீதி என்ற கருத்தின் அடிப்படையில் இங்கு ஒன்றுகூடி உள்ளோம். 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்தான் சட்டப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார் என பேசினார். 

”கலவர பூமியாக மாறும்”:

தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது என சுட்டிக்காட்டி பேசினார். 

தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். 69 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீத இட ஒதுக்கீடாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என ஆவேசமாக பேசினார். 

தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஆமைகள் எவற்றிற்கெல்லாம் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்களின் நிலை குறித்தும் அவர்களின் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளவும் அவர்களை முன்னேற்றவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் அதனை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு எடுக்க மறுக்கிறது என காட்டமாக தெரிவித்தார். 

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சட்டம் தான் உள்ளது. பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் சாத்தியம் தானே தமிழக முதல்வர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மீண்டும் மீண்டும் அதே போயை சொல்லி வருகிறார். சட்டமன்றத்திலும் அதே பொய்யை பேசுகிறார். 

மத்திய அரசு விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க உள்ளது அதனோடு சேர்த்து இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள சில சமுதாயங்களில் ஒரு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி கூட கிடையாது, டாக்டர்கள் கிடையாது அப்படியானால் சமூக நீதி எங்கே உள்ளது?  பிறகு எப்படி அந்த சமுதாயங்கள் முன்னேறும் என கேள்வி 

தமிழ்நாட்டில் எந்தெந்த சாதி எவ்வளவு உள்ளது என்ற அனைத்து விவரங்களும் திமுக விடும் உள்ளது. எந்த தெருவில் எந்த சாதி உள்ளது எந்த வீட்டில் எத்தனை சமூகத்தினர் உள்ளனர் என்ற விவரங்களை திமுக வைத்துள்ளது ஆனால் அந்த விவரங்களை சமூக நீதிக்காக பயன்படுத்தாமல் ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என விமர்சனம் செய்தார். 

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்துவிடும் அதன் பிறகு அந்தந்த சாதியினர் தேர்தலில் போட்டியிட கூடுதலாக சீட்டு கேட்பார்கள் கட்சியில் அதிகமாக மாவட்ட செயலாளர்கள் கேட்பார்கள் என்பதனால் திமுக இதனை எடுக்க மறுக்கிறது எனவும் விமர்சனத்தை வைத்தார். 

இதையும் படிங்க: Kuthambakkam Bus Stand: கிளாம்பாக்கத்தை விடுங்க.. குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நிலை என்ன ? - மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?

ஆனால் தமிழக முதலமைச்சர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்வது வேடிக்கையாக உள்ளது .SC,ST, MBC, BC பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது 

மேலும் பிராமணர்கள், ரெட்டியார் ,நாயுடு உள்ளிட்ட சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீட்டை கொடுக்கலாம் அதற்கு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் .

தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும் நாங்கள் முதற்கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் அதன் பிறகும் முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம் என கூறி முடித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி
ADMK Poster | செங்கோட்டையனுக்கு நன்றி” ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டோ! அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்
செங்கோட்டையனை சமாளிப்பாரா EPS?கொங்கில் பலவீனமாகும் அதிமுக? | Sengottaiyan vs EPS
டம்மியான மதராஸி 25 கோடிப்பே... பட்ஜெட்டை தொடுமா? | Rukmini | Madharaasi Collection
வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி உயிர் தப்பிய பாமக ம.க.ஸ்டாலின் ஆடுதுறை பேருராட்சியில் பரபரப்பு | PMK Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன? #TTVDhinakaran #EPS #ADMK
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.