மேலும் அறிய

திருவண்ணாமலை: எ.வ.வேலு அதிகாரத்தால் மாவட்டம் பிரிக்கப்படவில்லை! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

"திருவண்ணாமலை மாவட்டத்தில் தன்னுடைய அதிகாரம் குறைந்துவிடும் என்பதற்காக, மாவட்டத்தை எ.வா வேலு பிரிக்க விடவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு"

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், திமுக அரசின் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் பிரிப்பது குறித்து

அமைச்சர் எ.வ. வேலுவின் அதிகாரம் குறைந்துவிடும் என்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக ரீதியாகப் பிரிக்க அவர் அனுமதிக்கவில்லை என அன்புமணி குற்றம் சாட்டினார். மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை பிரிப்பதன் மூலமே அதன் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களை ஏமாற்ற பணமூட்டைகளுடன் வரும் எ.வ. வேலுவையும், அவரது மகனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்கள்:

திமுக தனது தேர்தல் வாக்குறுதியான "தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு" என்பதை நிறைவேற்றவில்லை என அன்புமணி சாடினார். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தால், 1.30 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று, போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் செல்வது சுற்றுப்பயணம் அல்ல, அது வெறும் சுற்றுலா என்றும், திமுக அரசு கொண்டு வந்த முதலீடுகளில் 10% மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் அன்புமணி கூறினார். இதுகுறித்த விவரங்களை விரைவில் புத்தகமாக வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்:

"ஹிட்லர் கூட செய்யாத கொடூரத்தை விவசாயிகளுக்கு திமுக அரசு செய்துள்ளது," என்று அன்புமணி ஆவேசமாகக் கூறினார். சோறு போடும் கடவுளான விவசாயிகளை, கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் குண்டர் சட்டத்தில் அடைத்தது மன்னிக்க முடியாத செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு:

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசிய அன்புமணி, இந்த விவகாரத்திற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 46 ஆண்டுகளாகப் போராடி வருவதாகத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியும், முதல்வர் ஸ்டாலின் உள் ஒதுக்கீட்டை வழங்க மனமில்லாமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

மேலும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், வன்னியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது 10.5% அல்ல, 15% இடஒதுக்கீடு என்பது நிரூபணமாவதுடன், பிற சமூகங்களுக்கும் தேவையான இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அன்புமணி கூறினார்.

நந்தன் கால்வாய் திட்டம்:

90 ஆண்டுகால கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்திற்கு வெறும் ரூ.400 கோடி மட்டுமே தேவைப்படும் நிலையில், ரூ.4 லட்சம் கோடி பட்ஜெட் போடும் திமுக அரசு அதை ஒதுக்க மறுக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget