மேலும் அறிய

AIADMK Issue: ஓ.பி.எஸ். கடிதத்தை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி..! அப்போ அ.தி.மு.க. வேட்பாளர்கள் கதி..?

உள்ளாட்சித் தேர்தல் படிவத்தில் கையெழுத்து இடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி வாங்காமலே திருப்பி அனுப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவம் ஏ மற்றும் பி யில் கையெழுத்து இட தயாரா? என்று ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஓ பன்னீர்செல்வம் தரப்பு அனுப்பிய கடிதத்தை வாங்காமலே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன் நிருபர்களைச் சந்தித்தார்.


AIADMK Issue: ஓ.பி.எஸ். கடிதத்தை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி..! அப்போ அ.தி.மு.க. வேட்பாளர்கள் கதி..?

முன்னதாக, அப்போது, அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி இடைத்தேர்லில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த படிவத்தில் கையெழுத்து இட ஓ.பன்னீர்செல்வம் தயார் என்றும், எடப்பாடி பழனிசாமி தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த படிவத்தில் அவர் கையெழுத்து இடாவிட்டால் உண்மையான தொண்டர்கள் யார் என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 9-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


AIADMK Issue: ஓ.பி.எஸ். கடிதத்தை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி..! அப்போ அ.தி.மு.க. வேட்பாளர்கள் கதி..?

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து கையெழுத்து இட்டால் மட்டுமே செல்லும் என்ற சூழல் உள்ளது. ஆனால், அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளதால் அந்த படிவங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இடாமல் இருந்து வந்தனர்.

 உள்ளாட்சித் தேர்தலுக்கான படிவத்தை சமர்ப்பிக்க நாளையே மறுநாள் என்பதால், இவர்கள் இருவரும் கையெழுத்து இடாவிட்டால் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எடப்பாடி ஆதரவாளர்கள் அடுத்த பொதுக்குழுவை கூட்டியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் மேல் அக்கறை என்ற புள்ளியில் சவால் விடுத்துள்ளார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Embed widget