மேலும் அறிய

"ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இபிஎஸ்ஸுக்கு 64 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு” - வழக்கறிஞர் மணிகண்டன்.

ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழகத்திற்கு சேலத்தில் இருந்து மனு அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைக் கழக அறிவிப்புபடி கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுகவின் கோட்பாட்டிற்கு எதிராக செயல்பட்ட புகழேந்தி என்பவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனிடையில் கழகத் தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை வழங்கிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கையெழுத்திட்ட அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்திற்கு வரவழைத்து ஒரு மணிநேரம் பேசியுள்ளார். எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் மணிகண்டன் என்பவர் புகார் மனு அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதுதொடர்பாக புகார் மனு அனுப்பிய முன்னாள் கவுன்சிலரும், அதிமுக உறுப்பினருமான வழக்கறிஞர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை ஒரு மணி நேரத்துக்கு மேலாக சந்தித்து பேசியுள்ளார். பின்னர் வெளியே வந்த பெங்களூர் புகழேந்தி பன்னீர்செல்வத்தின் வீட்டின் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியின் பற்றிய அநாகரிக மாக விமர்சித்துப் பேசியுள்ளார். இது கட்சித் தொண்டர்களிடையே இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் உருவெடுப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நான் அளித்த புகார் மனுவிற்கு பொதுக்குழு கூட்டத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த பிறகு அடுத்தகட்ட கூட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார்.

திமுகவில் இருந்து வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆரால் அதிமுக எதிராக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. ஆனால் இந்த அதிமுக கோட்பாடுகளை உடைத்தெறிந்து திமுகவை பாராட்டுவதும், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்தார். இதனிடையே பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக தினகரன் பேட்டி வாயிலாக தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு கட்சிக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கண்ணியம் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் நீடித்துக் கொண்டு கொண்டிருக்கிறார். அவர் மீது எடுக்கும் நடவடிக்கையை தள்ளி வைத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தீர்மானமாக நிறைவேற்றி பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தக் கட்சியிலும் இரட்டை தலைமை என்பது இல்லை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும்,திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்பொழுது இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

இவர் கடந்த 16 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget