மேலும் அறிய

மேகதாது அணை விவகாரத்தை கண்காணிக்க தனி குழு- ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் நீர் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களை  சந்தித்த போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும், அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்க உள்ளேன்  என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார்.  குறிப்பாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்டிவிட வேண்டும் என்பதில் இதுவரை முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவும், இப்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் உறுதியாக உள்ளனர். புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒருவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது  கண்டிக்கத்தக்கது. மெலும் மேகதாது  அணையை கட்டுவதற்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 


மேகதாது அணை விவகாரத்தை கண்காணிக்க தனி குழு- ராமதாஸ்

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் அது தான் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணையாக இருக்கும். தொடக்கத்தில் ரூ.5912 கோடி செலவில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் மேகதாது அணையை கட்டுவதற்கு திட்டமிட்ட கர்நாடக அரசு, 2019-ஆம் ஆண்டில் அணைக்கான  மதிப்பீட்டை ரூ.9,000 கோடியாக உயர்த்தியது. மேகதாது அணையின் கொள்ளளவும் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. இது ஏற்கனவே கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  ,கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவான 49.45 டி.எம்.சியை விட 42% அதிகம் ஆகும். இந்த  அணையும் கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரப்பூர்வ கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரிக்கும். நீர்நிலைகளை இணைத்து சட்டவிரோதமாக கர்நாடக அரசு சேமித்து வைத்துள்ள 40 டி.எம்.சி நீரையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 225 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.  மேகதாது அணைக்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் அனுமதி அளிக்காது; அனுமதி அளிக்கவும் முடியாது. இதை உணர்ந்து கொண்ட கர்நாடக அரசு இப்போது புதிய தந்திரத்தை கையில் எடுத்துள்ளது. மேகதாது அணை பாசனத்திற்கான அணை இல்லை, பெங்களூர் மாநகரத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான அணை என்பது தான் அந்த உத்தியாகும்.  கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை இந்தக் கருத்தை மீண்டும் கூறி உறுதி செய்திருக்கிறார். இதனடிப்படையில் தான் மத்திய அரசிடம் கர்நாடகம் அனுமதி கோரவுள்ளது.


மேகதாது அணை விவகாரத்தை கண்காணிக்க தனி குழு- ராமதாஸ்

தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதும் இரு மாநில ஒப்பந்தத்தின்படி சாத்தியமற்றது தான். ஆனால், அந்த அணை குடிநீர் தேவைக்கானது என்று வாதிட்டு, அதற்கு கர்நாடகம் அனுமதி பெற்று அணையையும் கட்டி முடித்து விட்டது. அதேபோன்று மேகதாது விவகாரத்தில் நடந்து விடக் கூடாது. பெங்களூர் மாநகரத்திற்கு காவிரி ஆதாரத்திலிருந்து இப்போதே தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை உச்சநீதிமன்றமும் அனுமதித்துள்ளது. மேலும் பெங்களூர் மாநகரின் ஆண்டு குடிநீர் தேவை 4.75 டி.எம்.சி மட்டும் தான். அதற்காக 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை கட்டுவது நியாயமல்ல. இதை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் இனி வரும் நாட்களில் எந்த நேரமும் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு.


மேகதாது அணை விவகாரத்தை கண்காணிக்க தனி குழு- ராமதாஸ்

 காவிரி  விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க காவிரி தொழில்நுட்பக் குழு என்ற அமைப்பு  ஏற்படுத்தப்பட்டதைப் போல, மேகதாது அணை விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் நீர் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். இதை உடனடியாக செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து நீர்வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.  உடனடியாக அத்துறைக்கு  தனி செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget