மேலும் அறிய

காந்தியை கொன்றவர்கள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள் - 7 பேர் விடுதலை குறித்து கொளத்தூர் மணி கருத்து

''சிறைத்துறை நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமே தவிர சிறையாளிகளை மீண்டும் மீண்டும் சிறையில் வைத்து கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை''

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புதிய கிளை திறப்பு விழா மற்றும் தொண்டர்கள் இணையும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் மற்றும் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவிப்பவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என  கேட்டு கொண்டார். 

தொடர்ந்து பேசிய கொளத்தூர் மணி,  திராவிட முன்னேற்ற கழகம் 161 என்ற அரசியல் சட்டப்பிரிவின் படி தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் செய்து அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை காலம் தாழ்த்தி வருகிறார்கள். இப்போது பல வழக்குகளில் கூறிய படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும், தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்க வேண்டும், தேவையில்லாமல் இழுத்தடிப்பது நியாயமல்ல எனக்கூறி இருக்கிறார்கள், எனவே இதற்கு பிறகாவது ஆளுநர் அவர்களும் அல்லது மத்திய உள்துறை அமைச்சகமும் அதற்கான அக்கறை எடுத்து செயல்படும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

காந்தியை கொன்றவர்கள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள் - 7 பேர் விடுதலை குறித்து கொளத்தூர் மணி கருத்து

மேலும் நீண்டகால சிறைவாசிகள் ஏராளமானோர் இன்னும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சிறைவாசிகள், வீரப்பனின் சகோதரர் மாதையன் அவரோடு சேர்ந்த பெருமாள் போன்றவர்கள் 33 ஆண்டுகள் சிறையில் உள்ளார்கள். வழக்கமான நடைமுறை என்னவென்றால் சிறை என்பது குற்றம் செய்து விட்டு தண்டிக்கப்பட்டவர்களை  நல்லவர்களாக மாற்றுவதற்காகத்தான், 30 ஆண்டுகள் கழித்தும் சிறைத்துறையால் அவர்களை வெளியே வரமுடியாத அளவிற்கு வைத்துள்ளார்கள் என்றால் சிறைத்துறை குறித்துதான் அரசு கவனிக்க வேண்டும், சிறைத்துறை நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமே தவிர சிறையாளிகளை மீண்டும் மீண்டும் சிறையில் வைத்து கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.

காந்தியை கொன்றவர்கள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள் - 7 பேர் விடுதலை குறித்து கொளத்தூர் மணி கருத்து

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டு கொன்றவர்கள் கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள், ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடியாக ஈடுபடாதவர்கள் உதவி செய்திருப்பார்கள் என கருதப்படுபவர்கள், நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிப்பதில் எந்த நியாயமும் இல்லை, எனவே உடனடியாக 7 பேரை மட்டுமல்ல நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிப்பவர்கள் அனைவரையும் தண்டனை பிரிவை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மீண்டும் மாரிதாஸ் கைது...திண்டுக்கல் மாணவி இறப்பு - தென் மண்டலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget