மேலும் அறிய

தமிழுக்குத் தொண்டு செய்வோருக்கு இனி மாதம் ரூ.8000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி நாள் எது தெரியுமா?

தமிழுக்குத் தொண்டு செய்வோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூலம் இனி ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் என்பதற்குப் பதிலாக 150 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்பு

2025-2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், கடந்த 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் தற்போது ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 150 ஆக உயர்த்தப்படும் என்றும், இதற்கெனத் தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகையின் முழு விவரம்

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்த் தொண்டில் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு, முதுமைக் காலத்திலும் பொருளாதார வறுமை தாக்காவண்ணம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

மாதாந்திர உதவித்தொகை: ரூ.7,500/-.மருத்துவப் படி: ரூ.500/-.

மொத்தம்: திங்கள்தோறும்( மாதம் தோறும் ) ரூ.8,000/- அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகையானது தமிழறிஞர்கள் தங்கள் வாழ்நாட்காலம் முழுவதும் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

சலுகைகள் 

இந்த உதவித்தொகை மட்டுமின்றி, தகைமை கொண்ட அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் அரசு வழங்குகிறது.

மேலும், தமிழுக்காகத் தொண்டாற்றிய இந்த உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னரும் இத்திருத்தொண்டு தொடர்கிறது. அவர்களின் வாழ்விணையர் (கணவன்/மனைவி), அல்லது திருமணமாகாத மகள், அல்லது கைம்பெண் மகள் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2,500/- மற்றும் மருத்துவப் படியாக ரூ.500/- என மாதந்தோறும் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள்

2025-2026ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

 * வயது: 01.01.2025 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

* வருவாய்: ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்).

* பிற உதவித்தொகை: மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

தேவையான ஆவணங்கள்:

* தமிழ்ப் பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு.

 * தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று (இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்).

 * ஆதார் அட்டை நகல்.

* குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு).

* மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

விண்ணப்பப் படிவத்தினை மண்டல / மாவட்டத் தமிழ் வளர்ச்சி துணை / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலிருந்தும் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட மூல விண்ணப்பத்தை நேரிலும், அல்லது tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும் சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் மற்றும் சமர்ப்பிக்கும் இடம்

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 17.11.2025 ஆகும் 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"திராணி இருந்தால் தீப்பெட்டி சின்னத்தில் வா!" - துரை வைகோவிற்கு நேரடி சவால் விட்ட மார்கோனி..
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
"ஒரே கூட்டணி.. ஒரே தொகுதி.. ஆனால் இரண்டு வேட்பாளர்கள்!
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Embed widget