மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 16 வரை நடக்கும் சிறப்பு முகாம்கள்..! எதற்காக? முழு விவரம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலவாரியப் பதிவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகின்றன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் எளிதில் சென்றடைவதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபர்களைப் பல்வேறு அரசு நலவாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்வதற்கும், அதற்குத் தேவையான அடிப்படைச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதற்கும் ஏதுவாக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நலவாரியங்களில் பதிவு செய்யலாம்?

இம்முகாம்களில் தகுதியான பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பின்வரும் முக்கிய நலவாரியங்களில் புதிய பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்படும்.

* தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்
* தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்
* தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்
* தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம்

இந்த வாரியங்களில் உறுப்பினர்களாக இணைவதன் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணத்திற்கான நிவாரணத் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை எவ்விதத் தடையுமின்றி நேரடியாகப் பெற முடியும்.

முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் (அட்டவணை)

பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள முகாம்களை அறிந்து எளிதில் பங்கேற்கும் வகையில், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் (BDO Offices) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை இச்சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அதன் முழு விவரம் பின்வருமாறு:

18.07.2025 - செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

25.07.2026 - கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகம்  காலை 09:00 - மாலை 05:00 

01.08.2026 - மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

08.08.2026 - குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

16.08.2026 - சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

1. சாதிச் சான்றிதழ் (Community Certificate)
2. வருமானச் சான்றிதழ் (Income Certificate)
3. குடும்ப அட்டை / ரேஷன் கார்டு (Ration Card)
4. நலவாரிய அட்டை (ஏற்கனவே பதிவு செய்திருந்தால்)
5. ஆதார் அட்டை (Aadhaar Card) 

விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்றவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அதே இடத்தில் விரைந்து பரிசீலனை செய்து வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; "அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நலவாரிய உதவிகள் அனைத்தும் அடித்தட்டு மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே இந்த சிறப்பு முகாம்களின் நோக்கமாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் முகாம்களில்  பங்கேற்று, பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாம்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் திரளாக வந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 16 வரை நடக்கும் சிறப்பு முகாம்கள்..! எதற்காக? முழு விவரம்!
மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 16 வரை நடக்கும் சிறப்பு முகாம்கள்..! எதற்காக? முழு விவரம்!
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அதிரடி அறிவிப்பு!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
Mayiladuthurai Power Shutdown (16.07.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் பவர்கட் - முழு விபரம்!
Mayiladuthurai Power Shutdown (16.07.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் பவர்கட் - முழு விபரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget