மேலும் அறிய

புதிய ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டம்.. குவிந்த மனுக்கள்... எங்கே தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் முதல்முறையாக நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து மனுக்களை அளித்து குறைகளை தெரிவித்துள்ளனர்.

மாற்றப்பட்ட ஆட்சியர் 

மயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் மகாபாரதி நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தொடர்பாக பேசிய காணொளி வைரலான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனை அடுத்து தமிழக முதன்மைச் செயலாளர் முருகானந்தம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த மகாபாரதியை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதனை அடுத்து மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகாபாரதி கடந்த பிப்ரவரி 28 -ம் மாலை மாற்றப்பட்டார். பின்னர் மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். 


புதிய ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டம்.. குவிந்த மனுக்கள்... எங்கே தெரியுமா?

274 மனுக்கள் 

கடந்த மார்ச் 1-ம் தேதி சனிக்கிழமை பொறுப்பேற்ற நிலையில், திங்கட்கிழமையான இன்று வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அவர் கலந்துக்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 16 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி 07 மனுகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 24 மனுக்களும் மேலும் பல்வேறு புகார்கள் தொடர்பாக மனுக்கள் 17 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 20 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 36 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நில பிரச்சனை தொடர்பாக 15 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 29 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 11 மனுக்களும், இலவச வீடு வேண்டி 30, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக 19 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 08, கள்ள மது விற்பனை செய்து திருந்தி வாழ்வோர் மறுவாழ்வு உதவி 02, சட்டம் ஒழுங்கு தொடர்பாக 05, தொழிலாளர் நலன் தொடர்பாக 02 என மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன. 


புதிய ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டம்.. குவிந்த மனுக்கள்... எங்கே தெரியுமா?

நடவடிக்கைக்கு பரிந்துரைத்த ஆட்சியர் 

இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 6690 ரூபாய் மதிப்பில் இலவச தையல் இயந்திரமும், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 7 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரத்து 390 மதிப்பில் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மடக்கு சக்கர நாற்காலிகளையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.


புதிய ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டம்.. குவிந்த மனுக்கள்... எங்கே தெரியுமா?

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்;, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொ) ரவி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget