மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (14.05.2026) : மயிலாடுதுறை: மே 14 மின்தடை – உங்கள் பகுதி இருக்கா? முழு பட்டியல் இதோ..!

Mayiladuthurai Power Shutdown 14.05.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் நிலைய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், வரும் மே 14, 2026 அன்று பல பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

இது குறித்து சீர்காழிகோட்ட பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி க்ஷ, சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் அவசியமான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் மின்சார விநியோகத்தின் தரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பல கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகள் மின்தடைக்கு உள்ளாகும். மே 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிவடைந்தால், மின்சாரம் அதற்கு முன்பே வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மின்தடை அமல்படுத்தப்படும் பகுதிகளில்

* சீர்காழி நகரம்

* சீர்காழி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் 

* புங்கனூர்

* சட்டாநாதபுரம்

* மேலசாலை

* கதிராமங்கலம்

* ஆத்துக்குடி

* திருப்புங்கூர்

* பனமங்கலம்

* கோவில்பத்து

* புளிச்சக்காடு

* கற்பகம் நகர்

* தென்பாதி

* கொள்ளிடம் முக்கூட்டு,

* விளந்திட சமுத்திரம்

மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அடங்கும். இப்பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகள் மின்சார வசதியின்றி இருக்கும்.

இதேபோன்று, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பூர் துணை மின்நிலைய பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக இயக்குதல் மற்றும் பராமரிப்பு மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன்படி, கீழ் வரும் பகுதிகளான 

* பெரம்பூர்

* கடக்கம்

* கிளியனூர்

* சேத்தூர்

* முத்தூர்

* எடக்குடி

* பாலூர்

* கொடைவிளாகம்

* ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 

நாளை மே 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை அமல்படுத்தப்படும். இதனால், விவசாய பணிகள், சிறு தொழில்கள் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம்.

இந்த நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் சேமிப்பு, மின்சார சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல், மின்தடை நேரத்தில் தேவையற்ற மின்சார உபயோகத்தை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்தடை காலத்தில் அவசர தேவைகளுக்காக ஜெனரேட்டர்கள் மற்றும் மாற்று மின்சார வசதிகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய சேவை நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின்விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் குறைக்கப்பட்டு, மின்சார வழங்கல் சீராக இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்சார தேவையை சமாளிக்க இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். தற்காலிக சிரமத்தை பொறுத்து, நீண்டகால பயனை பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், மே 14 அன்று நடைபெறவுள்ள இந்த மின்தடை அறிவிப்பு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், மின்சார சேவையின் தரத்தை உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், இந்த மின்தடையின் தாக்கத்தை குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget