Mayiladuthurai Power Shutdown (02.08.2025): மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஷாக் நியூஸ்! நாளை உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது..!
Mayiladuthurai Power Shutdown 02.08.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (02.08.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மேமாத்தூர் துணை மின்நிலையம்
அந்த வகையில் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளைய தினம் 02.08.2025 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவிசெயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மேமாத்தூர், கீழ்மாத்தூர், சாத்தனூர், மேலக்கட்டளை, ஆறுபாதி, பரசலூர் ஒரு சிலபகுதி. நல்லுச்சேரி, ஆனைமட்டம், கடலி, நரசிங்கநத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் காலை 9.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
மயிலாடுதுறை துணை மின்நிலையம் பேச்சாவடி
இதேபோன்று நாளைய தினம் மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதை அடுத்து காலை 09.00 மணி முதல் மாலை 5.00 வரை இந்த மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் தடைபெறும் என என மயிலாடுதுறை உதவிசெயற்பொறியாளர் அப்துல் வஹாப் மறக்காயர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் தடைபெறும் ஊர்கள்
மூவலூர், சித்தர்காடு, அரையபுரம், மறையூர், கூறைநாடு, மகாதான தெரு, பெரிய கடைத் தெரு, பூம்புகார் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர், அரங்ககுடி, செறுதியூர், குளிச்சார், மன்னன்பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மயிலாடுதுறை நகர் துணை மின் நிலையம்
மேலும், மயிலாடுதுறை நகர் துணை மின் நிலையத்திலும் நாளைய தினம் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதை அடுத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைப்படும் இடங்கள்
பட்டமங்கலம் தெரு, அரசு மருத்துவமனை சாலை, ஸ்டேட் பேங்க் ரோடு, திருவிழுந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.






















