Mayiladuthurai Power Shutdown (06.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown 06.02.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (06.02.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
சீர்காழி மின் கோட்டம்
அந்த வகையில் சீர்காழி கோட்டத்தில் 06.02.2025 வியாழக்கிழமை இன்று வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் மற்றும் திருவெண்காடு ஆகிய துணைமின் நிலையங்களில் உள்ள 11 KV சீர்காழி நகர்-1, திருவெண்காடு தொழிலகம் மற்றும் மகேந்திரபள்ளி உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 KV சீர்காழி நகர், திருவெண்காடு தொழிலகம் மற்றும் மகேந்திரபள்ளி உயரழுத்த மின்பாதைகளில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி (சீர்காழி வடக்கு), அனுராதா ( சீர்காழி தெற்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோலக்கா, ரயிலடி ரோடு, கோயில்பத்து, பணங்காட்டாங்குடி ரோடு, விளந்திடசமுத்திரம், ஊழியங்காரதோப்பு, புளிச்சகாடு, மகேந்திரபள்ளி, காட்டூர், கோதண்டாபுரம், அளக்குடி, முதலைமேடு, முதலைமேடு திட்டு, புங்கலூர், பெருமங்கலம், கற்கோயில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், ஆலஞ்சேரி, கொண்டல், கீழதேனூர், ஆதமங்கலம், திருவெண்காடு நகர், முத்தையாநகர், சாலைகார தெரு, பெருந்தோட்டம், சாவடிக்குப்பம் கோசாலி குப்பம், தாயக்கர் குப்பம், மடத்துக்குப்பம், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மயிலாடுதுறை மின் கோட்டம்
இதேபோன்று நாளையதினம் மயிலாடுதுறை கோட்டத்தில் 06.02.2025 வியாழக்கிழமை இன்று மயிலாடுதுறை துணையின் நிலையத்தில் வழுவூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வழுவூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்நிறுத்த செய்யப்படும் பகுதிகள்
எலந்தங்குடி, திருநாள்கொண்டச்சேரி, வழுவூர், பூவாலை, கப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.