மேலும் அறிய

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 2000 -ம் ஆவது கோயில் குடமுழுக்காக பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 2000 -ம் ஆவது கோயில் குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்த திருப்பறியலூர் என்று அழைக்கப்படும் பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான, தேவாரம் பாடல் பெற்ற அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 


திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

கோயில் வரலாறு 

முன்னொரு காலத்தில் செய்நன்றி மறந்த மாமன் முறை கொண்ட தட்சனை, வீரபத்திரரை கொண்டு தட்சனின் தலையை கொய்து, சுவாமி வதம் செய்த தலமாகவும், பின்னர் தட்சனின் மனைவி வேதவல்லி வேண்டுதலை ஏற்று ஆட்டின் தலையை பொருத்தி, தட்சனை சிவபெருமான் உயிர்ப்பித்த தலமாகவும் விளங்குவதால் சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டது. கோயிலின் வரலாறு குறித்து தக்கயாக பரணி என்ற நூலில் ஒட்டக்கூத்தர் விவரமாக குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு விவாகத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 


திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

பாலாலயம் 

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகமானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மகா கும்பாபிஷேகம் விழா செய்ய தருமபுரம் ஆதீனம் மற்றும் அவ்வூர் பக்தர்கள் முடிவெடுத்து அதற்காக திருப்பணிகளை கடந்த ஆண்டு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து பாலாலயம் பூஜைகள் செய்து பணிகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். 


திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

அதனைத் தொடர்ந்து கோயிலில் புதிய காட்டிட வேலைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் கடந்த ஒர் ஆண்டாக நடைபெற்று நிறைவுற்றது. அதனை அடுத்து கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, கும்பாபிஷேக தினமான இன்று கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 



திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

பூர்வாங்க பூஜைகள் 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 -ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், கடந்த 27-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின. தொடர்ந்து இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாசாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயில் சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசத்தை அடைத்தனர்.


திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கும்ப கலசத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஆதீன மடாதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திமுக ஆட்சியில் நடைபெற்ற 2000-ம் ஆவது கோயில் கும்பாபிஷேகம் - எந்த கோயில் தெரியுமா?

திமுக ஆட்சியில் 2000 வது கும்பாபிஷேகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தொன்மையான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2,000 -வது குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"கூட்டணியில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவோம்" - நீட் விவகாரத்தில் தமிழக அரசை சாடிய விசிக விஜயரங்கன்!
பேருந்து நிலையத்தில் நடுங்கவைத்த காட்சி! தாய்க்கு சேலை... குழந்தைக்கு பால்... சீர்காழி மக்களின் நெகிழ் மனிதநேயம்!
பேருந்து நிலையத்தில் நடுங்கவைத்த காட்சி! தாய்க்கு சேலை... குழந்தைக்கு பால்... சீர்காழி மக்களின் நெகிழ் மனிதநேயம்!
200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!
200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
ஆடி ஆஷாட நவராத்திரி: காரைமேடு வாராஹி அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Embed widget