மேலும் அறிய

சீர்காழியில் சோகம்: பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! உறவினர்கள் ஆவேசம், கார் கண்ணாடிகள் உடைப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடைபெற்ற கோர விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பேருந்தை பல்சர் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு வாலிபர்கள், முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த காரில் மோதி, நிலை தடுமாறி விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் கூடி வந்த உறவினர்கள் கோபத்தில், விபத்திற்குக் காரணமானதாகக் கூறப்படும் காரின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற விதம் 

விபத்தில் உயிரிழந்தவர்கள் சீர்காழி சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் 27 வயதான தனபால் மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் 25 வயதான கோபால் ஆவர். நண்பர்களான இவர்கள் இருவரும் பல்சர் இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சீர்காழியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.


சீர்காழியில் சோகம்: பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! உறவினர்கள் ஆவேசம், கார் கண்ணாடிகள் உடைப்பு!

நொடியில் நடந்த கோர சம்பவம் 

அப்போது  சீர்காழி சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே தனபால் மற்றும் கோபால் இருவரும் பயணித்த இருசக்கர வாகனம், முன்னால் சென்ற புதுச்சேரி அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்தது. அந்தப் பேருந்து காரைக்காலில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. முந்திச் செல்லும் முனைப்பில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்றுடன் இருசக்கர வாகனம் மோதியது. இந்த மோதலில், பைக் நிலைதடுமாறிச் சறுக்கி விழுந்ததில், அதில் பயணித்த தனபால் மற்றும் கோபால் இருவரும் அருகே வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தக் கோர விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உறவினர்களின் ஆத்திரம்: கார் கண்ணாடிகள் சேதம்

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சீர்காழி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் உயிரிழந்த தனபால் மற்றும் கோபால் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சீர்காழியில் சோகம்: பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! உறவினர்கள் ஆவேசம், கார் கண்ணாடிகள் உடைப்பு!

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவம் நடந்த இடத்தில் திரண்டு வந்தனர். அவர்கள் ஆத்திரம் அடைந்து, விபத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காரின் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்து மற்றும் அதைத் தொடர்ந்த சலசலப்பு காரணமாக மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சீர்காழியில் சோகம்: பேருந்து சக்கரத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி! உறவினர்கள் ஆவேசம், கார் கண்ணாடிகள் உடைப்பு!

காவல் துறையினர் தீவிர விசாரணை 

சீர்காழி காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தைக் கடக்கும் முயற்சியின்போது ஏற்பட்ட தவறுதான் விபத்திற்குக் காரணமா அல்லது எதிரே வந்த காரின் ஓட்டுநர் தவறு செய்தாரா என்பது குறித்து போலீஸார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த விபத்து மீண்டும் ஒருமுறை வலியை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
HOLIDAY: கொத்தாக டிசம்பரில் வரும் தொடர் விடுமுறை... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
கொத்தாக டிசம்பரில் வரும் தொடர் விடுமுறை... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?
இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?
Cyclone Ditwah; நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
நெருங்கும் 'டிட்வா' புயல்.! இன்று 6 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Embed widget