மேலும் அறிய

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய முதியவரின் உடலுக்கு அரசு மரியாதையை கோட்டாட்சியர் அர்ச்சனா செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் 56 வயதான சேகர். கூலி தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து  அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள்  தானமாக பெறப்பட்டது.


சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

இந்நிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்து உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நன்றி தெரிவித்தார். மேலும் இறந்த சேகர் உடலுக்கு மலர் வளையம் வைத்து வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாச்சியர் இளங்கோவன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர்.  இறந்த சேகருக்கு அமுதா என்ற மனைவியும் இலக்கியா, இன்பரசி, இந்துமதி உள்ளிட்ட நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்த நிலையிலும் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி மற்ற உயிரை காப்பாற்றிய சேகரையும் அவரது குடும்பத்தினரையும் கிராம மக்கள் ஆறுதல் தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.


சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

விழிப்புணர்வுகள் இல்லாத காரணம்

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,  அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே சாலை பாதுகாப்புகள் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது.  இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனை அடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது.  உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  


சீர்காழி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கோட்டாட்சியர்

உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை

குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகத்திற்கு 6,322 பேர்,  கல்லீரலுக்கு 438 பேர், இதயத்திற்கு 76 பேர், நுரையீரலுக்கு 64 பேர், இதயம் மற்றும் நுரையீரலுக்கு 25 பேர், கைகளுக்கு 27 பேர்,  சிறுகுடலுக்கு 2 பேர், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு 40 பேர் காத்திருக்கின்றனர். இதேபோல் சிறுநீரகம் மற்றும் கணையத்திற்கு 42 பேர், சிறுகுடல் மற்றும் வயிற்றுக்கு ஒருவர் என்று மொத்தம் 7,037 பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு அறிவித்த தமிழக அரசு

இந்நிலையில், கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 23 -ம் தேதி  உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு,  அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.  அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள்,  உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது.  தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சரின்  இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறந்த பிறகு அரசு மரியாதை என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதால் பலர் மனமுவந்து உறுப்புகளை தானம் செய்து வருகிறார்கள். இறந்த பிறகு பயனற்று போகும் உறுப்புகளை பலருக்கு வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்டவர் மறைவுக்கு பிறகும் பலரை வாழ வைக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget