மேலும் அறிய

திருமண மண்டபத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல்- அதிர்ச்சியடைந்த மணப்பெண்

சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம் டீல் போட்டு மணமகனின் நண்பர்கள் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டுள்ளனர்.

சீர்காழியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம், மணமகனின் நண்பர்கள் நூறு ரூபாய் பத்திரத்தில் சில விதிமுறைகளை எழுதி கையெழுத்து வாங்கி கொண்டுள்ளனர்.

திருமண சேட்டைகள் 

திருமணம் என்றாலே அதில் மணப்பெண் மணமகனின் நண்பர்களின் சேட்டைகள் அரங்கேறும், மேலும் திருமணத்திற்கு பின்னர் மணமகன் அவர்களின் நண்பர்களின் நட்பு வட்டாரத்தை குறைத்து கொண்டு அதிக நேரம் மனைவியுடன் செலவிட வேண்டும் என பல பெண்கள் எதிர்பார்த்து அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து, நண்பர்களுடன் வெளியில் செல்வது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிப்பது வாடிக்கையான ஒன்று.


திருமண மண்டபத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல்- அதிர்ச்சியடைந்த மணப்பெண்

சீர்காழி திருமணம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி மாரிமுத்து நகரை சேர்ந்த ராஜா - சரஸ்வதி இவர்களது மகன் முத்துக்குமார் இன்ஜினியரிங் படித்து முடித்து, தற்போது மயிலாடுதுறையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் - தமிழ்செல்வி என்பவர்களது மகள் இளங்கலை அறிவியல் பட்டதாரியான பவித்ரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தென்பாதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.


திருமண மண்டபத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல்- அதிர்ச்சியடைந்த மணப்பெண்

பத்திரத்தில் எழுதி கொடுத்த மணப்பெண் 

திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி சென்ற நிலையில், மணமகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் மணப்பெணிடம் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர். அந்த ஒப்பந்த பத்திரத்தில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வடலூர் ஆபத்தாரணபுரம் வ.உ.சி நகரில் வசித்து வரும் பவித்ரா ஆகிய நான் என் திருமணத்திற்கு பிறகு எனது கணவரை நைட் ஷோ சினிமாவிற்கு அனுப்புவேன் மேலும் செலவிற்கு காசு கொடுத்து விடுவேன். அவர் நண்பர்களுடன் கோவா, பாண்டிச்சேரி, தாய்லாந்து போன்ற டிரீப்க்கு அனுப்புவேன். என் கணவர் அவர்களது நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் மைனா பட வில்லி பாணியில் எப்போ வருவீங்க? எப்போ வருவீங்க? என்று கேட்கமாட்டேன்.


திருமண மண்டபத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல்- அதிர்ச்சியடைந்த மணப்பெண்

மேலும் அவர் தூங்கும் போது பாயாகவும், ஏங்கும் போது தாயாகவும் இருப்பேன் என்று எனது கணவர் முத்துக்குமாருக்கு உறுதியளிக்கிறேன். இப்படிக்கு பவித்ரா என எழுதி கையெழுத்து வாங்கி கொண்டனர். இதற்கு மணப்பெண்ணுக்கு முழு சம்மதம் தெரிவித்து கையெழுத்து இட்டுள்ளார்.


திருமண மண்டபத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல்- அதிர்ச்சியடைந்த மணப்பெண்

மைனா பட பாணி

மைனா படத்தில் வரும் காட்சிகளைப் போல வெளியில் செல்லும் கணவனை நிம்மதியாக இருக்க விடாமல் எப்ப வருவீங்க? எப்ப வருவீங்க? என டார்ச்சர் அனுபவிக்க கூடாது என்பதற்காக நண்பர்கள் எடுத்த புதுவிதமான யுத்தி திருமணத்திற்கு வந்திருந்த மற்ற திருமணம் ஆன ஆண்களை நம்மை இப்படி யாரும் காக்க வில்லையே என ஆதங்கத்துடன் நகைச்சுவையாக கூறி சென்றனர். மேலும் பலர் பத்திரம் கையெழுத்து முறையை கண்டு வியந்தனர். 


திருமண மண்டபத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த செயல்- அதிர்ச்சியடைந்த மணப்பெண்

நண்பர்கள் கருத்து 

மேலும் இதுகுறித்து மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகனின் நண்பர்கள் கூறுகையில், இது நாங்கள் விளையாட்டிற்காக செய்யவில்லை. இதுபோன்ற ஒவ்வொரு நண்பன்பனையும், திருமணத்திற்கு பிறகு தங்களை விட்டு பிரிந்து சென்று விடுகிறது. அவர்களின் நட்பு திருமணத்திற்கு பிறகு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. இதுபோன்று இனி நடைபெற கூடாது என்ற எண்ணத்தில் இதனை முயற்சி செய்துள்ளோம். இது சாத்தியமானதா என்பது எங்களுக்கு தெரியாது இருந்தாலும் ஒரு எங்கள் நட்பை நண்பனின் வாழ்க்கை துணை புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையில் இதனை செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Embed widget