மேலும் அறிய

வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று திரும்பிய நபரை வீல் சேரில் அழைத்து வந்த ஆட்சியரிடம் முறையிட்ட  குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று திரும்பிய நபரை வீல் சேரில் அழைத்து வந்து விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவரது  குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். 

லிப்ட் கேட்டு வந்தவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் விவசாயக் கூலி வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 25 -ஆம் தேதி மயிலாடுதுறைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது குத்தாலம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார். 

India On Iran: உரசிய ஈரான், திருப்பி கொடுத்த இந்தியா - ”வரலாற புரட்டிப் பாருங்க” என்ற பதிலடிக்கான காரணம் என்ன?


வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!

இருசக்கர வாகனத்தில் மோதிய டிப்பர் லாரி

அப்போது அசிக்காடு சாலை அருகே வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தை‌ முந்தி செல்ல முற்பட்டுள்ளது, அப்போது சுந்தர்ராஜ் லிப்ட் கேட்டு சென்ற இருசக்கர வாகனத்தில் டிப்பர் லாரி உரசியது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது.  இதில் இருசக்கர ஒட்டி வந்த நபர் வயலில் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பின்னால் அமர்ந்திருந்த சுந்தர்ராஜ் கால் மற்றும் கைகளில் டிப்பர் லாரியில் பட்டு கடுமையாக எலும்பு முறிவு ஏற்பட்டது.

RG Kar Protest: இறங்கி வந்த மம்தா - மருத்துவர்கள் கோரிக்கை ஏற்பு - கொல்கத்தா கமிஷ்னர் உட்பட 3 பேர் மாற்றம்


வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்கை

இதனை அடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேலும் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுந்தர்ராஜீ அனுப்பப்பட்டுள்ளார்‌.  அங்கு சிகிச்சை நிறைவுற்று வீட்டிக்கு செல்லாத சுந்தர்ராஜ் நேரடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வருகை தந்தார். 


வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!

திகைத்து நின்ற ஆட்சியர்

தொடர்ந்து வீல் சேரில் குடும்பத்தினருடன் பரபரப்பாக வந்த சுந்தரராஜீ மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்குள் நுழைந்துள்ளார்‌. இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் செய்வதறியாமல் உடனடியாக கீழே இறங்கி வந்து அவரின் குறைகளை கேட்டறிந்தார்.  குத்தாலம் காவல் நிலையத்தில் விபத்துக்கு காரணமான டிப்பர் லாரியின் உரிமையாளர் சேகர் மீது புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது மனைவி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Samsung Protest : போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...


வீல் சேரில் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த நபர்; செய்வதறியாது திகைத்து போன ஆட்சியர்....!

ஆட்சியரின் நடவடிக்கை

பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்த நிலையில், விபத்து குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் எழுந்து நடக்க முடியாத சூழலில் சுந்தர்ராஜ் இருப்பதால் சிறிய அளவிலான கடை வைத்து  தொழில் செய்து அவரின் வாழ்வாதாரத்தை காக்க ஏற்பாடு செய்வதாக அவரிடம் ஆட்சியர் உறுதியளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget