மேலும் அறிய

அரசுப் பேருந்து நடத்துனர் மீது கொடூரத் தாக்குதல்: படியில் நின்ற மாணவர்களை மேலே வர சொன்னதால் விபரீதம்

மயிலாடுதுறையில் படியில் நின்ற பள்ளி மாணவர்களை மேலே வர சொன்ன நடத்துநரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகேயுள்ள பாலக்குடி கிராமத்தில், அரசுப் பேருந்தின் படியில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே ஏறி வரச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனர் மீது, மாணவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் நடத்துனரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படியில் பயணம் - விபரீத விளைவு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கிச் செல்லும் '1சி' என்ற அரசுப் பேருந்து வழக்கம் போல மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (46) என்பவர் இந்தப் பேருந்தின் நடத்துனராகப் பணியில் இருந்துள்ளார். பேருந்து பாலக்குடி கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சில பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

'படியில் பயணம் நொடியில் மரணம்' என்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடத்துனர் முனியப்பன், படியில் நின்ற மாணவர்களை உடனடியாக மேலே ஏறி வந்து அமருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குவாதம் மற்றும் தாக்குதல்

நடத்துனரின் பாதுகாப்பு கருதிய பேச்சைக் கேட்க மறுத்த மாணவர்கள், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடத்துனர் முனியப்பனுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் போன் செய்து அவர்களது உறவினர்களுங்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாலக்குடி கிராமத்தில் பேருந்தைக் வழிமறித்துள்ளனர்.

அப்போது அங்கு திரண்ட ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள், நடத்துனர் முனியப்பனை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாகக் கீழே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் நடத்துனர் முனியப்பனின் வலது கையில் பலத்த அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தாக்குதலில் வலியால் துடித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை - போலீஸார் விசாரணை

இதனையடுத்து, சக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உதவியுடன் நடத்துனர் முனியப்பன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தைக் கண்டறிய சி.டி. ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பின்னரே, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்துத் துல்லியமாகத் தெரியவரும் என்று தெரிவித்தனர். தற்போதைக்கு அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசுப் பேருந்து நடத்துனர் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் பரவியதால், அவ்வழியாகச் சென்ற நான்கு அரசுப் பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பேருந்துகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி

படியில் பயணம் செய்வது தவறு என்று நடத்துனர் அறிவுறுத்தியதற்காக, பள்ளி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டு, அவர்களைச் சார்ந்தவர்கள் பேருந்தை வழிமறித்து அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கே அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் பலரும் வேதனை தெரிவித்தனர்.

'படியில் பயணம் நொடியில் மரணம்' என்ற விழிப்புணர்வு வாசகம் தினமும் அனைத்துப் பேருந்துகளிலும் இடம்பெற்றுள்ள நிலையிலும், மாணவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பொறுப்பின்றி நடந்துகொண்டது கடும் கண்டனத்துக்குரியது. அரசுப் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மணல்மேடு போலீசார், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்திய நபர்களை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களைச் சார்ந்தவர்கள் ஏன் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறை: சீட் கிடைக்காதவர்கள் துரோகம் செய்கிறார்கள் - மதன் குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை: சீட் கிடைக்காதவர்கள் துரோகம் செய்கிறார்கள் - மதன் குற்றச்சாட்டு!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே பரபரப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் - 2026 தேர்தலைப் புறக்கணிக்க முடிவு!
சீர்காழி அருகே பரபரப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் - 2026 தேர்தலைப் புறக்கணிக்க முடிவு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
Maruti Suzuki Price: மாருதி சுசுகி கார்களின் விலை உயர்வு: நடுத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சி! 2026-ல் புதிய விலை மாற்றம்?
மாருதி சுசுகி கார்களின் விலை உயர்வு: நடுத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சி! 2026-ல் புதிய விலை மாற்றம்?
Embed widget