மேலும் அறிய

அரசுப் பேருந்து நடத்துனர் மீது கொடூரத் தாக்குதல்: படியில் நின்ற மாணவர்களை மேலே வர சொன்னதால் விபரீதம்

மயிலாடுதுறையில் படியில் நின்ற பள்ளி மாணவர்களை மேலே வர சொன்ன நடத்துநரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகேயுள்ள பாலக்குடி கிராமத்தில், அரசுப் பேருந்தின் படியில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே ஏறி வரச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனர் மீது, மாணவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் நடத்துனரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படியில் பயணம் - விபரீத விளைவு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கிச் செல்லும் '1சி' என்ற அரசுப் பேருந்து வழக்கம் போல மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (46) என்பவர் இந்தப் பேருந்தின் நடத்துனராகப் பணியில் இருந்துள்ளார். பேருந்து பாலக்குடி கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சில பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

'படியில் பயணம் நொடியில் மரணம்' என்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடத்துனர் முனியப்பன், படியில் நின்ற மாணவர்களை உடனடியாக மேலே ஏறி வந்து அமருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குவாதம் மற்றும் தாக்குதல்

நடத்துனரின் பாதுகாப்பு கருதிய பேச்சைக் கேட்க மறுத்த மாணவர்கள், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடத்துனர் முனியப்பனுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் போன் செய்து அவர்களது உறவினர்களுங்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாலக்குடி கிராமத்தில் பேருந்தைக் வழிமறித்துள்ளனர்.

அப்போது அங்கு திரண்ட ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள், நடத்துனர் முனியப்பனை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாகக் கீழே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் நடத்துனர் முனியப்பனின் வலது கையில் பலத்த அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தாக்குதலில் வலியால் துடித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை - போலீஸார் விசாரணை

இதனையடுத்து, சக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உதவியுடன் நடத்துனர் முனியப்பன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தைக் கண்டறிய சி.டி. ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பின்னரே, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்துத் துல்லியமாகத் தெரியவரும் என்று தெரிவித்தனர். தற்போதைக்கு அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசுப் பேருந்து நடத்துனர் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் பரவியதால், அவ்வழியாகச் சென்ற நான்கு அரசுப் பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பேருந்துகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி

படியில் பயணம் செய்வது தவறு என்று நடத்துனர் அறிவுறுத்தியதற்காக, பள்ளி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டு, அவர்களைச் சார்ந்தவர்கள் பேருந்தை வழிமறித்து அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கே அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் பலரும் வேதனை தெரிவித்தனர்.

'படியில் பயணம் நொடியில் மரணம்' என்ற விழிப்புணர்வு வாசகம் தினமும் அனைத்துப் பேருந்துகளிலும் இடம்பெற்றுள்ள நிலையிலும், மாணவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பொறுப்பின்றி நடந்துகொண்டது கடும் கண்டனத்துக்குரியது. அரசுப் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மணல்மேடு போலீசார், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்திய நபர்களை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களைச் சார்ந்தவர்கள் ஏன் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget