மேலும் அறிய

மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் முழுமை பெறாமல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலைய சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி நடைபெற்றது. 


மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் பணிகள் 

இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி, கமிஷனர் ஹேமலதா, துணை சேர்மன் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் உணவக கட்டிடம், மிதிவண்டி நிறுத்தம், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டு பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தரம் தொடர்பாக போராட்டம் 

இந்த சூழலில் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தரமாக நடைபெறவில்லை என கூறி தொடர்ந்து அதிமுக, பாமக மற்றும் வர்த்தக சங்கம் என அவ்வப்போது பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். அதனால் போராட்டம் நடைபெறும் சமயங்களில் பணிகள் தடைப்பட்டன.

மீண்டும் போக்குவரத்து 

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவுற்று பேருந்துகள் பேருந்து நிலைத்தின் ஒருபகுதிவரை சென்று வந்தன. ஒருபகுதியினை தகர தடுப்புகள் கொண்டு அடைத்து வைத்திருந்ததனர். தற்போது பணிகள் முழுமையாக முடியாத தருவாயில் சாலைகள் மட்டும் அமைக்கப்பட்டதை அடுத்து, பேருந்து நிலையம் உள்ளே சென்று வெளியே வர முழுவதுமாக திறந்து விடப்பட்டுள்ளது‌.


மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஆட்டோ ஓட்டுனர்கள் மகிழ்ச்சி 

இதனால் பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டிவந்த ஓட்டுநர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுமையாக கட்டுமான பணிகள் நிறைவு பெறாத நிலையில், பேருந்துகள் தற்போது பேருந்து நிலையம் உள்ளே அனுமதிக்கப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டதால் மீண்டும் எங்களின் வாழ்வாதாரம் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என கூறிய ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலைய வாயில் பகுதிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். இது அவ்வழியே சென்றவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பறக்கும் புழுதி 

மேலும் முழுமையான பணிகள் முடிவடையாத நிலையில் பேருந்துகள் உள்ளே சென்றுவருவதால் பேருந்து நிலையத்தில் சிமெண்ட் புழுதிகள் காற்றில் பறந்து பெரும் காற்று மாசை ஏற்படுத்துவதுடன், பயணிகள் கண்களிலும் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பயணிக்களின் ஆடைகளையும் அது பாழாக்குவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!
சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!
சொந்தமாக பைக் வாங்க ஆசையா? தமிழ்நாடு அரசின் ரூ.50,000 மானியம்... உடனே முந்துங்கள்..!
சொந்தமாக பைக் வாங்க ஆசையா? தமிழ்நாடு அரசின் ரூ.50,000 மானியம்... உடனே முந்துங்கள்..!
60 ஆண்டுகாலக் காத்திருப்பு... ஆச்சாள்புரத்தில் அசைந்தாடிய மகா ரதம்! ஆச்சாள்புரத்தில் நிலை கொண்ட திருத்தேர்!
60 ஆண்டுகாலக் காத்திருப்பு... ஆச்சாள்புரத்தில் அசைந்தாடிய மகா ரதம்! ஆச்சாள்புரத்தில் நிலை கொண்ட திருத்தேர்!
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
TN Weather Update: பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
Embed widget