மேலும் அறிய

புத்தகப்பையை தோளில் சுமந்து கல்லூரிக்கு செல்லும் 72 வயது மாணவர் - ஆச்சரியத்தில் சக மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தகப்பையை தோளில் சுமந்து கல்லூரிக்கு செல்லும் 72 வயது முதியவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதான ஒரு முதியவர் டிப்ளமோ படிப்பைத் தொடர்வதன் மூலம் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது வருகிறார். கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் 72 வயது செல்வமணி. இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சீனிவாசா சுப்புராயா அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அவரது கல்வி ஆர்வம், அவரை சக மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக மாற்றியுள்ளது.


புத்தகப்பையை தோளில் சுமந்து கல்லூரிக்கு செல்லும் 72 வயது மாணவர் - ஆச்சரியத்தில் சக மாணவர்கள்

ஓய்வுக்குப் பிறகும் ஓயாத ஆர்வம்

முதியவர் செல்வமணி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பே பணி ஓய்வு பெற்ற அவர், தனது ஓய்வுக்கு பின்னர், வீட்டிலேயே பொழுதைப் போக்காமல், படிப்பின் மீது கொண்ட தீராத காதலின் காரணமாக மீண்டும் கல்லூரிக்குச் செல்ல முடிவு செய்தார். ஏற்கனவே ஐ.டி.ஐ., எம்.காம்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை முடித்திருந்தாலும், தொழில்நுட்பப் படிப்பு மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. அதன் விளைவாக, அவர் சீர்காழி அருகே உள்ள பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். கல்லூரி நிர்வாகம், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வயது வரம்பு இல்லை என்பதால் அவரது ஆர்வத்தைப் பாராட்டி, அவருக்குப் படிக்க வாய்ப்பளித்தது. இதன் மூலம், அவரது கனவை உயிர்ப்பிக்க செல்வமணிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.


புத்தகப்பையை தோளில் சுமந்து கல்லூரிக்கு செல்லும் 72 வயது மாணவர் - ஆச்சரியத்தில் சக மாணவர்கள்

அர்ப்பணிப்புடன் கூடிய தினசரிப் பயணம்

வடலூரில் வசிக்கும் செல்வமணி, தன் வயதையும் பொருட்படுத்தாமல் தினமும் 50 கிலோமீட்டர் தூரம் பயணித்து கல்லூரிக்குச் சென்று வருகிறார். பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்து, அவர் உரிய நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிடுகிறார். இளம் மாணவர்களைப் போலவே, சீருடை, அடையாள அட்டை அணிந்து,  தோளில் புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, கையில் மதிய உணவையும் எடுத்துச் செல்லும் அவரது சுறுசுறுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


புத்தகப்பையை தோளில் சுமந்து கல்லூரிக்கு செல்லும் 72 வயது மாணவர் - ஆச்சரியத்தில் சக மாணவர்கள்

அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போதும், அவரை நன்கு கவனித்துக்கொண்டு அவருக்கு வேண்டியவற்றை செய்து வைத்துவிட்ட பின்னர், அவர் தினமும் காலை 9 மணிக்குச் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு வந்துவிடுகிறார். மாலை 5 மணி வரை வகுப்புகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மீண்டும் வடலூருக்குப் பயணமாகிறார். அவரது இந்த அர்ப்பணிப்பும், பொறுப்புணர்வும் இளைஞர்களுக்கும் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் ஒரு வழிகாட்டி

கல்லூரியில் செல்வமணியுடன் படிக்கும் மற்ற மாணவர்கள், அவரை அன்புடன் "தாத்தா" என்று அன்போடு அழைக்கின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல், அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பேராசிரியர்களும், அவரது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் கண்டு வியப்படைந்துள்ளனர்.


புத்தகப்பையை தோளில் சுமந்து கல்லூரிக்கு செல்லும் 72 வயது மாணவர் - ஆச்சரியத்தில் சக மாணவர்கள்

இதுகுறித்து ஒரு மாணவர் கூறுகையில், "தாத்தாவுக்கு இந்த வயதிலும் இவ்வளவு படிப்பு ஆர்வம் இருக்கும்போது, நாங்கள் ஏன் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டும்? அவர் எங்களுக்கு ஒரு உத்வேகம். எந்த ஒரு சந்தேகத்தையும் அவர் தயங்காமல் கேட்டுத் தெளிவுபெறுவார். அவரது விடாமுயற்சி எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு பெரிய பாடம்" என்று தெரிவித்தார்.

கல்லூரிப் பேராசிரியர்கள், செல்வமணி மற்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாகத் திகழ்வதாகப் பாராட்டினர். கல்லூரி முதல்வர் கூறுகையில், "பாலிடெக்னிக் படிப்புகளுக்கு வயது வரம்பு இல்லை என்பதால், நாங்கள் அவரைச் சேர்க்கத் தயங்கவில்லை. அவரது படிப்பு ஆர்வம், இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். அவர் எங்களின் கல்லூரிக்கு ஒரு பெருமை" என்று தெரிவித்தார்.

ஓய்வுக்குப் பின் வாழ்வின் அர்த்தம்

சமீபகாலமாக, ஓய்வுபெற்ற பிறகு தனிமையிலும், செயலற்ற தன்மையிலும் வாடும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் செல்வமணி போன்றவர்கள், ஓய்வுபெற்ற காலத்தைக்கூட ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி, புதிய இலக்குகளை அடைவதன் மூலம் வாழ்வுக்கு மேலும் அர்த்தம் கொடுக்கிறார்கள். இவரது கதை, கல்விக்கு வயது ஒருபோதும் தடையல்ல என்பதையும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு எப்போதும் காலம் இருக்கிறது என்பதையும் அழுத்தமாக உணர்த்துகிறது. செல்வமணியின் இந்தத் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து, கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget