மேலும் அறிய

17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை 17 ஆண்டுகள் ஆகிய நிலையில் திரும்பி வராததால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி மூன்று பெண் பிள்ளைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு காவலர்களால் 2007 ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் காணாமல் போன தங்களது தந்தை குறித்து சிறப்பு தனிப்படை, சிபிசிஐடி, சிபிஐ விசாரணை நடத்தியும் 17 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் ஆட்சியர் அலுவலகத்தில் மகள்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை 

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட எழுமகளூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி சத்தியசீலன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி பெரம்பூர் பாலம் அருகில் நின்றிருந்த போது சந்தேகத்தின் பேரில் அப்போதைய மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர் உத்திராபதி ஆகியோர் சத்தியசீலனை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சத்தியசீலன் காணாமல் போனதால், அவரது மனைவி வனிதா பெரம்பூர் மற்றும் பாலையூர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். 


17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

சிபிசிஐடி - சிபிஐ விசாரணை 

அதன் பின்னரும் சத்தியசீலன் கண்டறியப்படாத நிலையில், அவரை கண்டுபிடித்து தரக் கோரி வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007, 2008 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 27‌‌.04.2008-இல் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் சத்தியசீலன் கண்டுபிடிக்கப்படாததால் இந்த வழக்கு 2013-ல் மத்திய குற்ற புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. ஆனால் சிபிஐ சத்தியசீலனை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

NEET Leak: 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு? முக்கிய விவரங்கள் லீக் ஆனதால் தேர்வர்கள் அதிர்ச்சி!


17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

தந்தை காணமால் போன நிலையில் தாயும் உயிரிழப்பு 

சத்தியசீலன் காணாமல் போன நாள்முதல் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி கிள்ளியூர் கிராமத்துக்கு விவசாயக் கூலி வேலைக்கு சென்றபோது பாம்பு கடித்து பரிதாபம் உயிரிழந்தார். சத்தியசீலன் காணாமல் போனபோது 4, 2, 1 வயது குழந்தைகளாக இருந்த அவரது மூன்று மகள்களும் தற்போது தாயும் உயிரிழந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தங்களது தந்தையை தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு (காவல்துறை) அமைத்து கண்டுபிடித்து தருமாறும்,

Petrol Bomb Attack: "எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு" சேலத்தில் பரபரப்பு..!


17 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக்கு சென்ற தந்தை இன்றுவரை வீடு திரும்பாத சோகம் - தேடும் பெண் பிள்ளைகள்

டிப்ளமோ மருத்துவமனை நிர்வாக மேலாண்மை படித்துள்ள தனக்கும் பத்தாம் வகுப்பு படித்துள்ள தனது சகோதரி லாவண்யா, பட்டப் படிப்பு படித்து வரும் ஹேமாவதி ஆகிய நாங்கள் தாய் தந்தை இல்லாமல் நிற்கதியாக உள்ள நிலையில், தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்பு அரசு வேலைவாய்ப்பு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென்று சத்தியசீலனின் மூத்த மகள் வர்ஷா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மனுவை அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவுக்கும், காவல்துறை இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Embed widget