மேலும் அறிய

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இப்படியொரு விபரீதமா? பரங்கிப்பேட்டை கடலில் என்ன நடக்கிறது?

பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனம் அனுமதி கோரியுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடல் வளம் அழியும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் எச்சரித்துள்ளார்

மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கத் தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தைத் தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டித் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.ஜெயராமன் எச்சரித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடலில் 4 கிணறுகள்: தனியார் நிறுவனத்தின் சதித் திட்டம்

செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன், இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள பேராபத்துகள் குறித்து விரிவாக விளக்கினார். அவர் கூறியதாவது; 

"கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில், கடற்கரையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை ‘இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளரேஷன் கம்பெனி’ (HOEC) என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான அனுமதியைக் கோரி, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNSCZMA) அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. இந்தத் தகவல் டெல்டா மற்றும் கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது."

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகளுக்குப் புறம்பானது!

தமிழக அரசு ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (Protected Agricultural Zone) அறிவித்துள்ளது என்பதைப் பேராசிரியர் ஜெயராமன் சுட்டிக்காட்டினார். கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஐந்து வட்டங்கள் இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் வருகின்றன.

அரசாணையின்படி, இப்பகுதிகளில் விவசாயத்திற்கும், அதனோடு சார்ந்த வாழ்வாதாரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு புதிய பெருந்திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு இருக்கையில், விதிகளுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு தனியார் நிறுவனம் கடலில் கிணறு தோண்ட அனுமதி கோருவதே சட்டவிரோதமானது என்று கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடல் வளம் மற்றும் மீன்வளம் அழியும் பேராபத்து

ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சியால் கடலில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து கூட்டத்தில் அடுக்கடுக்கான புகார்கள் வாசிக்கப்பட்டன;

நில அதிர்வுச் சோதனைகள் (Seismic Surveys): கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதைக் கண்டறிய நடத்தப்படும் தொடர் வெடிச் சத்தங்கள் மற்றும் நில அதிர்வுச் சோதனைகளால் கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன் இனங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரப் பறிப்பு: கடலில் கிணறுகள் அமைக்கப்பட்டு, தடம்பதிக்கப்பட்டால் மீனவர்கள் தங்களது படகுகளில் சுதந்திரமாகச் சென்று மீன்பிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். வாழ்வாதாரத்தை இழந்து மீனவக் குடும்பங்கள் தங்கள் பூர்வீகப் பகுதிகளை விட்டு வெளியேறும் அவலம் நேரிடும்.

அலையாத்தி காடுகள் (Mangroves) அழிவு: தமிழகத்தின் மிக முக்கிய இயற்கை அரணாக விளங்கும் அலையாத்தி காடுகளின் (மாங்குரோவ் காடுகள்) ஒரு பகுதி பரங்கிப்பேட்டையை ஒட்டி அமைந்துள்ளது. ஹைட்ரோகார்பன் கசிவு மற்றும் கடல் மாசுபாட்டால் இந்த இயற்கைச் சுவர்கள் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது.

மாநில அரசின் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளான பகுதி

"கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவு வரையிலான கடல் பகுதி என்பது மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய எல்லை ஆகும். எனவே, மத்திய அரசைக் கைக்காட்டித் தமிழக அரசு இதில் இருந்து தப்பித்துவிட முடியாது. ஆரம்ப நிலையிலேயே இந்த விண்ணப்பத்தைத் தமிழக அரசு நிராகரிக்க முழு அதிகாரமும் உள்ளது," என்று பேராசிரியர் ஜெயராமன் தெளிவுபடுத்தினார்.

மேலும், முந்தைய ஆட்சிக் காலங்களில் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கண்மூடித்தனமான அனுமதிகளைப் போல, தற்போதைய அரசு செயல்படக் கூடாது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகத் தமிழகத்தின் கடல் எல்லையைத் தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘ஒன்றாகத் திரள்வோம்’ - பெரு நிறுவனங்களுக்கு விழுந்த செக்!

இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளரேஷன் நிறுவனத்திற்கு இப்போது அனுமதி அளித்தால், அதனைத் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி (ONGC), வேதாந்தா (Vedanta) போன்ற மற்ற பெரு நிறுவனங்களும் அடுத்தடுத்து இப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிணறுகளை அமைக்கப் படையெடுக்கும் என்று கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

"இந்தத் திட்டத்தை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்காகப் பரங்கிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும், மீனவப் பெருமக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் கூட்டுப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்.

தமிழகத்தில் மீண்டும் ஒரு தார்மீகப் போராட்டச் சூழல் உருவாவதற்குத் தமிழக அரசு இடம் கொடுக்கக் கூடாது. பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஹைட்ரோகார்பன் விண்ணப்பத்தை அரசு உடனடியாகக் நிராகரிக்க வேண்டும்."

பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன்

மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இக்கூட்டம் கடலோர மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
மிட்நைட் திருட்டு... இலங்கை டூ வெளிநாடு ஸ்கெட்ச்! சினிமா பாணியில் மடக்கப்பட்ட சர்வதேச சிலை கடத்தல் கும்பல்!
மிட்நைட் திருட்டு... இலங்கை டூ வெளிநாடு ஸ்கெட்ச்! சினிமா பாணியில் மடக்கப்பட்ட சர்வதேச சிலை கடத்தல் கும்பல்!
புதிய மின் இணைப்பு முதல் பெயர் மாற்றம் வரை.. மயிலாடுதுறை மின் நுகர்வோருக்கான ஸ்பெஷல் டே!
புதிய மின் இணைப்பு முதல் பெயர் மாற்றம் வரை.. மயிலாடுதுறை மின் நுகர்வோருக்கான ஸ்பெஷல் டே!
Mayiladuthurai Power Shutdown (07.07.2026) :நாளை உங்க ஊர்ல பவர் கட் இருக்கா? சீர்காழி மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Mayiladuthurai Power Shutdown (07.07.2026) :நாளை உங்க ஊர்ல பவர் கட் இருக்கா? சீர்காழி மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
TVK DMK: உதயநிதிக்கு விஷயம் தெரியுமா..! தவெகவிற்கு தூதுவிடும் உயிர் நண்பர்? சிக்கலில் பள்ளிக்கல்வி மாஜி
உதயநிதிக்கு விஷயம் தெரியுமா..! தவெகவிற்கு தூதுவிடும் உயிர் நண்பர்? சிக்கலில் பள்ளிக்கல்வி மாஜி
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
Aadhav Arjuna vs DMK : ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சர் பதவிக்கு குறி.?? திமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்
ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சர் பதவிக்கு குறி.?? திமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்
Embed widget