மேலும் அறிய

விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், காவிரி நீர் மற்றும் பயிர்க்கடன் விவகாரத்திற்காக விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி 10 நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: காவிரி நீர் விவகாரத்தில் மத்திய, கர்நாடக அரசுகளின் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டி 10 நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திடீர் போராட்டம் - அதிர்ச்சியில் அதிகாரிகள்

கூட்டம் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், அங்கு திரண்டிருந்த விவசாயிகள் திடீரென தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து கருப்பு துணிகளை எடுத்து, கண்களில் கட்டிக்கொண்டு கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். ஆட்சியர் மற்றும் அரசுக்கு முன்பாகவே விவசாயிகள் கண்களில் கருப்பு துணியுடன் 10 நிமிடங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. எதிர்பாராத இந்நிகழ்வால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

காவிரி நீரின்றி கருகும் பயிர்கள் - கர்நாடக அரசுக்கு கண்டனம்

போராட்டத்தின் போது விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை ஆவேசமாக வெளிப்படுத்தினர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதல்களையும் சற்றும் மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு சட்டப்பூர்வமாக வர வேண்டிய காவிரி நீரைத் திறக்காமல் வஞ்சிப்பதோடு, தமிழக மக்களின் குறைந்தபட்ச குடிநீர்த் தேவைகளுக்கான நீரைக் கூட வழங்க மறுத்து வரும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கிற்கு விவசாயிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்பு

மேலும், காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகள் முழக்கமிட்டனர். கர்நாடக அரசு மேகதாதுவில் சட்டவிரோதமாகப் புதிய அணை கட்ட எடுக்கும் முயற்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசி வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். காவிரி பாசன மாவட்டங்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலான இத்தகைய பேச்சுக்களையும் மத்திய அரசின் போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதாக விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் குளறுபடி

தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் தொடர்பாகவும் விவசாயிகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்த தமிழக அரசு, அதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் குளறுபடிகளையும் புகுத்தியுள்ளது. இதனால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, தற்போது அமலில் உள்ள குளறுபடியான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நிபந்தனைகளின்றி விவசாயிகளின் அனைத்து வகையான வேளாண் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

தீர்வு காணக் கோரிக்கை

தொடர்ந்து 10 நிமிடங்கள் நடைபெற்ற இப்போராட்டத்திற்குப் பிறகு, கண்களில் கட்டியிருந்த கருப்பு துணிகளைக் கழற்றிய விவசாயிகள், ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, காவிரி உரிமையை மீட்டெடுக்கவும், கடன்களால் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். விவசாயிகளின் இந்த திடீர் வினோதப் போராட்டத்தால் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
Embed widget