மேலும் அறிய

டெங்குவை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவ குழுவினர்

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடியது. இதனால் ஆரம்ப காலத்தில் டெங்கு காய்ச்சலால் குறித்து கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

மயிலாடுதுறையில் தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தேசிய டெங்கு தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு வைரஸ், கொசுவினால் உண்டாகும் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று, ஒருவர் முறையான பராமரிப்பு எடுத்தால் தடுக்கப்படலாம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.  1779 -ன் ஆரம்பம் முதல் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவ தரவுகள் கூறுகின்றனர். எனினும் பரவலுக்கான விவரங்கள் மற்றும் நோய்களுக்கான காரணம் குறித்து 20 -ஆம் நூற்றாண்டில் தான் முழுமையாக தெரியவந்துள்ளது. 


டெங்குவை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவ குழுவினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடைப்பிக்கப்பட்ட தேசிய டெங்கு தடுப்பு தினம்  

இந்நிலையில், இந்தாண்டு தேசிய டெங்கு தடுப்பு தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் காளி வட்டார அரசு ஆரம்ப சுகாதாரத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜித் பிரபு குமார் உத்தரவின் பேரில்  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் மருத்துவர் பிரவீன், மாவட்ட பூச்சியில் வல்லுநர்  இளங்கோவன், காளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கிளிட்டன் ஜூட், காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொறுப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிகண்டன் இவர்களின் முன்னிலையில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு  நடைபெற்றது.


டெங்குவை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவ குழுவினர்

இதில் மயிலாடுதுறை வட்டார சுகாதார ஆய்வாளர்  பாஸ்கர் டெங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு  எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் மருத்துவர்கள், மருந்தாளுனர், ஆய்வக நட்புநர், சமுதாய சுகாதார செவிலியர்,  பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், RCH, NCD, MLHP செவிலியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, தேசிய டெங்கு கொசு ஒழிப்பு தின சுகாதார உறுதிமொழி ஏற்றனர். மற்றும் டெங்கு பற்றிய துண்டு பிரசாரங்கள்  பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. இறுதியில் மூத்த சுகாதார ஆய்வாளர் நடராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் டெங்கு காய்ச்சலால் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடியது. இதனால் ஆரம்ப காலத்தில் டெங்கு காய்ச்சலால் குறித்து கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். டெங்குவைக் குறிக்கக் கூடிய சில அறிகள் பற்றி நாம் பார்க்கலாம். டெங்குவினால் அவதிப்படக்கூடியவர்கள் வழக்கமாக பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்.


டெங்குவை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவ குழுவினர்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் 

1. அதிக காய்ச்சல்

2. தலைவலி

3. வாந்தி

4. தசை மற்றும் மூட்டுவலி

5. தோல் தடிப்புகள்

இந்த அறிகுறிகள் டெங்குவை குறிக்கும் அறிகுறிகள் ஆகும். மேலும்  சில சமயங்களில் இவைகள் இல்லாமலும் இருக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்ட அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனினும் இவை நோயின் ஆரம்ப அறிகுறிகள் தான். சில நேரங்களில் மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடும் இதனால் அது டெங்குவின் மிகத் தீவிர வடிவமாக உருவாகக் கூடும்.

தீவிர  டெங்குவின் அறிகுறிகள்

1. இரத்தப் போக்கு

2. இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்

3. இரத்தப் பிளாஸ்மா கசிவது

4. குறைந்த இரத்த அழுத்தம்

டெங்கு ஒரு அபாயமான நோய் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் ஆரம்ப அறிகுறிகளின் போதே மருத்துவ உதவியை உடனடியாக கோர வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் 

1. உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

2 வீட்டில் அல்லது வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்க விடாதீர்கள்.

3 மழைக்காலங்ளில் தேங்கிக்கிடக்கும் நன்னீர் அளவு அதிகரிப்பன் காரணமாக டெங்குவினால் –கொசுவினால் உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; இந்த நிலையில் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசுவினால் பரவும் நோயாகும். அது பல்வேறு வகையான ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. இரண்டாம் உலகப் போர் துவங்கியது முதலே டெங்கு காய்ச்சல் உலகளாவிய  கவலையளிக்கும் நோயாக இருந்து வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மின் வினியோகம் தொடர்பான புகாரா? தீர்வுகாண வழி இதுதான்..!
மின் வினியோகம் தொடர்பான புகாரா? தீர்வுகாண வழி இதுதான்..!
விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் வழங்குக!
விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் வழங்குக!" - மயிலாடுதுறையில் திரண்ட ஏசி மெக்கானிக்குகள்: தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை..
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
"விவசாயி அழிந்து வருகிறான்” - டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுதான்..
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget