மேலும் அறிய

Ditwah cyclone: டிட்வா புயலின் கோரம்: அறுந்து விழுந்த மின்கம்பி: மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மின்கம்பி அறுத்து விழுந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த 'டிட்வா' புயல் சின்னத்தின் கோரத் தாக்கத்தினால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயல் மழையினால் ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தால், இப்போது மனித உயிரையும் பலி வாங்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பி பட்டு, கடைக்குச் சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

துயரச் சம்பவம்

டிட்வா புயலின் தாக்கத்தினால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பலத்த காற்றும், கனமழையும் விடாமல் பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாகவும், பலத்த காற்றின் வேகத்தாலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, பாகசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு வடக்கு தெருவை தெருவை சேர்ந்தவர் ராஜா என்பவரது மகன் 19 வயதான பிரதாப் வழக்கம் போலத் தனது அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சீர்காழி கடை வீதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பிரதாப், நேற்றிரவு இரவு சுமார் 10:30 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

மரணக் குழி அமைத்த அறுந்த மின்கம்பி

பிரதாப் வீடு திரும்பும் வழியில், புயல் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மின் கம்பம் ஒன்றிலிருந்து மின்கம்பி அறுந்து, நிலத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையின் காரணமாக, அந்தப் பகுதியில் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. மேலும், இரவு நேரம் என்பதால் அந்த மின்கம்பி அறுந்து கிடந்ததை பிரதாப் கவனிக்கவில்லை.

இருள் சூழ்ந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரதாப் எதிர்பாராத விதமாக, அறுந்து தொங்கிக் கொண்டிருந்த அந்த உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராத விதமாக பிரதாப் மீது பட்டுள்ளது. உடனடியாகப் பிரதாப் மீது மின்சாரம் பாய்ந்தது.

சற்றும் எதிர்பார்க்காத இந்த மின் விபத்தில், அவர் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து உடனடியாக அப்பகுதியினர், பாகசாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரவு நேரத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் விரைந்து வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகளை வரவழைத்து அப்பகுதி மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர், உயிரிழந்து கிடந்த இளைஞர் பிரதாப்பின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் மற்றும் மின்வாரியத்தின் தரப்பில் ஏதேனும் அலட்சியம் இருந்ததா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தின் சோகமும், அரசின் மீதான கோபமும்

பத்தொன்பது வயதே ஆன மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் கேட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரின் நெஞ்சை உலுக்கியது. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மழைக் காலங்களில், பலத்த காற்று வீசும்போதும், மின் கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க, மின் கம்பிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், புயல், மழை காலங்களில் மின் இணைப்பைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இன்று ஓர் இளம் உயிர் பறிபோய்விட்டது எனப் பாதிக்கப்பட்ட செம்பதனிருப்பு பகுதி மக்கள் அரசு நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மின்வாரியம், அறுந்து கிடக்கும் கம்பிகளைக் கவனக்குறைவாகக் கையாண்டதால் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த பிரதாப்பின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
பணமின்றி தவித்த பெற்றோர்... தேவதூதனாய் வந்த சேவை சங்கம்! மயிலாடுதுறையில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்!
பணமின்றி தவித்த பெற்றோர்... தேவதூதனாய் வந்த சேவை சங்கம்! மயிலாடுதுறையில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்!
நாகை ஆட்சியரின் 'Digital' அழைப்பு... அலையெனத் திரளும் மக்கள்..!
நாகை ஆட்சியரின் 'Digital' அழைப்பு... அலையெனத் திரளும் மக்கள்..!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Renault Kwid: நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
நாட்டின் மலிவான CNG SUV, 32KM மைலேஜ், ரேட்டிங் எப்படி? ரூ.3,700 போதுமே -EMI விவரங்கள்
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
Embed widget