மேலும் அறிய

சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!

சீர்காழி அருகே 17 வயது சிறுவன் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, விசாரணை என்ற பெயரில் 17 வயது ஐ.டி.ஐ மாணவரை லத்தி மற்றும் பூட்ஸ் கால்களால் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயில் திருவிழாவில் நடந்த சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழகனி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் உள்ளூரில் உள்ள தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 13-ஆம் தேதி இரவு, சீர்காழியில் நடைபெற்ற உள்ளூர் கோயில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, தனது நண்பர்களுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டதும், ஒரே வாகனத்தில் மூவர் செல்வதால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பார்கள் என்ற பயத்தில், உடன் வந்த நண்பர்கள் இருசக்கர வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். எனினும், அந்த ஐ.டி.ஐ மாணவர் அச்சமடைந்து ஓடாமல் அங்கேயே நின்றுள்ளார்.

கொடூரத் தாக்குதல் மற்றும் மிரட்டல்

அங்கு வந்த காவல்துறையினர், மாணவரைப் பிடித்துக் காரணம் கேட்காமல் லத்தியாலும் பூட்ஸ் கால்களாலும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் நடைபெற்ற நகை திருட்டுச் சம்பவம் ஒன்றை மாணவர் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்த முயன்று, அதை ஒப்புக்கொள்ளச் சொல்லி வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணையின் இறுதியில் அவர் 17 வயது சிறுவன் (மைனர்) என்பது தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், நடந்த இச்சம்பவம் குறித்து வெளியே யாருடமாவது கூறினால், பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி

வீட்டிற்கு வந்த மாணவர் அச்சம் காரணமாக ஆரம்பத்தில் வீட்டில் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி அவருக்கு திடீரென கடுமையான தலைவலியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மேலும் தலையின் பின்புறம் பலத்த வீக்கம் இருப்பதைக் கண்ட அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு உள்நோயாளியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

இச்சம்பவம் குறித்து சிறுவனின் உறவினர்கள் உடனடியாக சிறார் உதவி மையத்தில் (Childline) முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் சகோதரி அஞ்சலி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் சகோதரி அஞ்சலி, "என் தம்பி எந்தத் தவறும் செய்யவில்லை. பயத்தில் நின்று கொண்டிருந்தவனைப் பிடித்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் கூறியதால், காவல்துறையினர் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, என் தம்பியைத் தாக்கிய காவலர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் கண்ணீருடன் தெரிவித்தார்.

சிறார் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்களும், உள்ளூர் பொதுமக்களும் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கொள்ளிடம் அருகே அதிர்ச்சி! வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் ஆபத்து - மேனாயிருப்பில் உச்சக்கட்ட பீதி!
கொள்ளிடம் அருகே அதிர்ச்சி! வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் ஆபத்து - மேனாயிருப்பில் உச்சக்கட்ட பீதி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget