மேலும் அறிய

உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த இளைஞர்கள் மற்றும் ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத்திறனாளிகள் அரசின் நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, தகுதியான கால வரம்பிற்குள் புதுப்பித்து காத்துக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் கால வரம்பு

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிப் பதிவுதாரர்களுக்கு சில குறிப்பிட்ட கால வரம்புகளும் தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

1.பொதுப்பிரிவினருக்கான தகுதிகள்: 

* மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2026 அன்றைய தேதியில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

* வேலைவாய்ப்பு அடையாள அட்டையை முறையாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுபடாமல் புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

* பள்ளிப் படிப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு (பிளஸ் 2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள் இதற்கு தகுதியுடையவர் ஆவர்.

2. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தகுதிகள்:

* மாற்றுத்திறனாளிப் பதிவுதாரர்களைப் பொறுத்தவரை, கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.2026 அன்றைய தேதியில் ஓராண்டு முடிந்திருந்தாலே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவராவர்.

மிக முக்கியமாக, மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வருமான வரம்போ அல்லது வயது உச்ச வரம்போ ஏதுமில்லை என மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டின் சாதனை மற்றும் நிதி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2025ஆம் நிதியாண்டில் மட்டும், மாவட்டத்தில் உள்ள 39 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 187 பொதுப்பிரிவு பயனாளிகள் என மொத்தம் 226 நபர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இவர்களுக்காக தமிழக அரசால் மொத்தம் ரூ.16,90,550 (பதினாறு இலட்சத்து தொன்னூறாயிரத்து ஐநூற்று ஐம்பது ரூபாய் ) நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதவித்தொகை விவரம் (கல்வித் தகுதியின் அடிப்படையில்)

பயனாளிகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.

பொதுப்பிரிவினருக்கான மாத உதவித்தொகை

பொதுப்பிரிவைச் சேர்ந்த பதிவுதாரர்களுக்கு இந்த உதவித்தொகையானது 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு, அவர்களின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் (SSLC Failed): மாதம் ரூ.200/-

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (SSLC Passed): மாதம் ரூ.300/-

* மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (HSC Passed): மாதம் ரூ.400/-

* பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (Degree Passed): மாதம் ரூ.600/-

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் அவர்களின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள்: மாதம் ரூ.600

* மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (HSC Passed): மாதம் ரூ.750/-

* பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (Degree Passed): மாதம் ரூ.1,000/-

வயது வரம்பு மற்றும் குடும்ப வருமான வரம்பு

பொதுப்பிரிவு மற்றும் இதர பிரிவினருக்கான தகுதி நிபந்தனைகள்

வயது வரம்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் (BC, BCM, MBC, OC) 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம்: பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்?

இத்திட்டத்தின் நன்மைகள் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பின்வருவோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்:

* பதிவுதாரர் தற்போது ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் (பள்ளி/கல்லூரி) மாணவராகப் பயின்று வரக்கூடாது.

* ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

* பொறியியல் (Engineering), மருத்துவம் (Medicine), விவசாயம் (Agriculture) மற்றும் சட்டம் (Law) போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் (Professional Degrees) முடித்தவர்கள் தகுதியற்றவர்கள்.

* அரசுப் பணியில் உள்ளவர்களோ அல்லது தனியார் துறையில் ஒரு முறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவரோ/பெறுபவரோ உதவித்தொகை பெற தகுதியில்லை.

* தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' பெறுபவர்கள் மற்றும் அரசின் வேறு ஏதேனும் திட்டத்தின் கீழ் நிதியுதவி அல்லது உதவித்தொகை பெறுபவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்ட தகுதிகளை நிறைவு செய்யும் பதிவுதாரர்கள், தங்களின் அசல் ஆவணங்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் (Xerox) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்கள்:

1. வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை (Employment ID Card)

2. பள்ளி மற்றும் கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark sheets)

3. மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate - TC)

4. குடும்ப அட்டை (Smart Ration Card)

5. அடையாளச் சான்றாக அரசு அடையாள அட்டை [Identity Card Omitted]

6. சாதிச்சான்றிதழ் (Community Certificate)

7. தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கப்பட்ட விபரம் அடங்கிய வங்கி கணக்கு புத்தகம் (பயனாளியின் பெயரில் இருக்க வேண்டும்).

அணுக வேண்டிய முகவரி:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 2வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை – 609001.

விண்ணப்பதாரர்கள் இந்த அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவங்களை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, வேலைவாய்ப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/download.html

https://tnvelaivaaippu.gov.in/download.html

என்ற பக்கத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்பவர்கள், படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் அலுவலகத் தொலைபேசி எண்ணான 04364-299790 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, உரிய அறிவுரைகளைக் கேட்டுப் பெற்று அதன்பின் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க இறுதி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான விண்ணப்பங்களை அனைத்து ஆவணங்களுடன் வருகிற 28.08.2026-க்குள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!
உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
போலீஸ் சோதனையில் நுழைந்த 'ஆட்சியரின்' கார்... மயிலாடுதுறை கொத்தத்தெருவில் நடந்தது என்ன?
போலீஸ் சோதனையில் நுழைந்த 'ஆட்சியரின்' கார்... மயிலாடுதுறை கொத்தத்தெருவில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து.! திமுக, தவெகவை வெளுத்தி வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்-
இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து.! திமுக, தவெகவை வெளுத்தி வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்-
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
Embed widget