மேலும் அறிய

மத்திய அரசைத் திருப்திப்படுத்த வேண்டும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக ஆளுநர் செயல்படுகிறார் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நினைவு அரங்கம் மற்றும் சிலை கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை: தமிழின் முதல் நாவலாசிரியரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நினைவு அரங்கம் மற்றும் சிலை கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட காவேரி நகர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏக்கள் எஸ்.இராஜகுமார் (மயிலாடுதுறை), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி) ஆகியோர் உடனிருந்தனர்.

கட்டுமானப் பணிகள் தீவிரம்: அமைச்சர் விளக்கம்

ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது; "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, பணிகளின் கூடுதல் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன."

இந்த அரங்கமானது சுமார் 9,500 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது.

 * அரங்கத்தைச் சுற்றி பாதுகாப்புச் சுற்றுச்சுவர் மற்றும் முறையான அணுகுசாலை.

 * அரங்கத்தின் உட்புறம் நவீன வசதிகளுடன் கூடிய ஒப்பனை அறைகள்.

 * முன்புற பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதித்தல்.

 * தடையற்ற குடிநீர் வசதிக்காகப் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்.

மேலும், மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் முன்சீப் வேதநாயகத்தின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் மற்றும் சிலை ஆகியவற்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் செயல்பாடு குறித்த விமர்சனம்

சட்டப்பேரவையின் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது, தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததைக் கண்டித்து ஆளுநர் கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் காரசாரமாகப் பதிலளித்தார்.

"தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் மரபுப்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், மத்திய அரசைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை," என்றார்.

மேலும், "வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குச் சிலை அமைத்துச் சிறப்புச் செய்தவர் நம் முதலமைச்சர். ஆனால், மத்திய அரசு அவருக்கு உரிய முறையில் சிலை அல்லது மணிமண்டபம் அமைக்கவில்லை" என்று சாடினார்.

பெயர் மாற்றக் கோரிக்கைகள் குறித்து

பெயர் பலகைகளில் சாதிப் பெயர்கள் நீக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜி.டி. நாயுடு போன்ற பெயர்களில் அது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும், மயிலாடுதுறையில் 'சுவாமி நாகப்ப படையாட்சி' என்று பெயர் வைக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு செல்லப்படும்," என உறுதியளித்தார்.

ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் சுகுமாரன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
உங்களிடம் NFDP அடையாள அட்டை இல்லையா? அப்படியானால் அரசு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்..
உங்களிடம் NFDP அடையாள அட்டை இல்லையா? அப்படியானால் அரசு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்..
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆண்ட்ராய்டு போன் இருந்தா போதும்.. கிராமத்திலேயே வேலை, கைநிறைய ஊக்கத்தொகை! நாகை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!
ஆண்ட்ராய்டு போன் இருந்தா போதும்.. கிராமத்திலேயே வேலை, கைநிறைய ஊக்கத்தொகை! நாகை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Embed widget