மேலும் அறிய

குப்பைக் காடாக மாறும் சீர்காழி நகரம்; மூட்டைகளில் குப்பைகளை கட்டி இழுத்துச் செல்லும் அவலம்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளைச் சேகரிக்க வழங்கப்பட்ட மின்சாரப் பேட்டரி வாகனங்கள் (Battery Vehicles) அனைத்தும் பழுதாகி முடங்கிக் கிடப்பதே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால் நகரம் முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பழுதான வாகனங்கள் - தேங்கும் கழிவுகள்

சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் நாள்தோறும் சேகரமாகும் பல டன் குப்பைகளை அகற்றுவதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. வீதி வீதியாகச் சென்று மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வாங்குவதற்கு இந்த வாகனங்கள் பெரிதும் உதவியாக இருந்தன.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக இந்த வாகனங்கள் ஒவ்வொன்றாகப் பழுதாகத் தொடங்கின. தற்போது பெரும்பாலான வாகனங்கள் இயங்காத நிலையில், நகராட்சி வளாகத்திலும், குப்பை கிடங்குகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் கடந்த 10 நாட்களாக நகரின் முக்கிய வீதிகள் முதல் சந்து பொந்துகள் வரை குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன.

மூட்டைகளில் குப்பைகளை இழுக்கும் அவலம்

வாகனங்கள் இல்லாததால், வேறு வழியின்றி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தார்ப்பாய் மற்றும் பெரிய கோணிப் பைகளில் குப்பைகளை மூட்டையாகக் கட்டி, அவற்றை தரதரவென இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: "வாகனங்கள் பழுதானது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. குப்பைகளை அள்ளாவிட்டால் பொதுமக்கள் எங்களைத் திட்டுகிறார்கள். அதனால், வேறு வழியின்றி அதிக எடையுள்ள குப்பைகளை மூட்டைகளாகக் கட்டி நீண்ட தூரம் இழுத்துச் செல்கிறோம். இதனால் எங்களுக்குத் தசைப்பிடிப்பு, முதுகு வலி மற்றும் கடுமையான உடல் சோர்வு ஏற்படுகிறது. ஒரு வாகனத்தில் செய்ய வேண்டிய வேலையை நான்கு பேர் செய்தாலும் முடிக்க முடிவதில்லை," என வேதனையுடன் தெரிவித்தனர்.

சுகாதாரச் சீர்கேடும் பொதுமக்கள் புகாரும்

குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், சீர்காழி பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி மற்றும் கடைவீதி பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் ஈக்கள் மற்றும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், கால்நடைகள் குப்பைகளைக் கிளறுவதால் சாலை முழுவதும் கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. "வரி செலுத்தும் எங்களுக்குச் சுத்தமான சூழலை வழங்க வேண்டியது நகராட்சியின் கடமை. ஆனால், பத்து நாட்களாகக் குப்பை வண்டி வராதது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது," எனச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகள்

* உடனடி சீரமைப்பு: பழுதாகி நிற்கும் பேட்டரி வாகனங்களை உடனடியாகப் பழுதுபார்த்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

*புதிய உபகரணங்கள்: பணியாளர்களுக்குத் தள்ளுவண்டிகள், கையுறைகள் மற்றும் குப்பை அள்ளும் நவீன உபகரணங்களை ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்.

* மாற்று ஏற்பாடு: நிரந்தரத் தீர்வு காணும் வரை, தற்காலிகமாக லாரிகள் அல்லது டிராக்டர்களைப் பயன்படுத்தி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

* பணியாளர் நலன்: அதிக பளுவைத் தூக்குவதால் பாதிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ் நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்கக் கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படும் நிலையில், அடிப்படை வாகன வசதி கூட இல்லாமல் பணியாளர்கள் அவதிப்படுவதும், நகரம் குப்பைக்காடாக மாறுவதும் சீர்காழி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget