மேலும் அறிய

குப்பைக் காடாக மாறும் சீர்காழி நகரம்; மூட்டைகளில் குப்பைகளை கட்டி இழுத்துச் செல்லும் அவலம்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளைச் சேகரிக்க வழங்கப்பட்ட மின்சாரப் பேட்டரி வாகனங்கள் (Battery Vehicles) அனைத்தும் பழுதாகி முடங்கிக் கிடப்பதே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனால் நகரம் முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பழுதான வாகனங்கள் - தேங்கும் கழிவுகள்

சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் நாள்தோறும் சேகரமாகும் பல டன் குப்பைகளை அகற்றுவதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. வீதி வீதியாகச் சென்று மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வாங்குவதற்கு இந்த வாகனங்கள் பெரிதும் உதவியாக இருந்தன.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக இந்த வாகனங்கள் ஒவ்வொன்றாகப் பழுதாகத் தொடங்கின. தற்போது பெரும்பாலான வாகனங்கள் இயங்காத நிலையில், நகராட்சி வளாகத்திலும், குப்பை கிடங்குகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் கடந்த 10 நாட்களாக நகரின் முக்கிய வீதிகள் முதல் சந்து பொந்துகள் வரை குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன.

மூட்டைகளில் குப்பைகளை இழுக்கும் அவலம்

வாகனங்கள் இல்லாததால், வேறு வழியின்றி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தார்ப்பாய் மற்றும் பெரிய கோணிப் பைகளில் குப்பைகளை மூட்டையாகக் கட்டி, அவற்றை தரதரவென இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: "வாகனங்கள் பழுதானது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. குப்பைகளை அள்ளாவிட்டால் பொதுமக்கள் எங்களைத் திட்டுகிறார்கள். அதனால், வேறு வழியின்றி அதிக எடையுள்ள குப்பைகளை மூட்டைகளாகக் கட்டி நீண்ட தூரம் இழுத்துச் செல்கிறோம். இதனால் எங்களுக்குத் தசைப்பிடிப்பு, முதுகு வலி மற்றும் கடுமையான உடல் சோர்வு ஏற்படுகிறது. ஒரு வாகனத்தில் செய்ய வேண்டிய வேலையை நான்கு பேர் செய்தாலும் முடிக்க முடிவதில்லை," என வேதனையுடன் தெரிவித்தனர்.

சுகாதாரச் சீர்கேடும் பொதுமக்கள் புகாரும்

குப்பைகள் முறையாக அகற்றப்படாததால், சீர்காழி பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி மற்றும் கடைவீதி பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் ஈக்கள் மற்றும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், கால்நடைகள் குப்பைகளைக் கிளறுவதால் சாலை முழுவதும் கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. "வரி செலுத்தும் எங்களுக்குச் சுத்தமான சூழலை வழங்க வேண்டியது நகராட்சியின் கடமை. ஆனால், பத்து நாட்களாகக் குப்பை வண்டி வராதது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது," எனச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகள்

* உடனடி சீரமைப்பு: பழுதாகி நிற்கும் பேட்டரி வாகனங்களை உடனடியாகப் பழுதுபார்த்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

*புதிய உபகரணங்கள்: பணியாளர்களுக்குத் தள்ளுவண்டிகள், கையுறைகள் மற்றும் குப்பை அள்ளும் நவீன உபகரணங்களை ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்.

* மாற்று ஏற்பாடு: நிரந்தரத் தீர்வு காணும் வரை, தற்காலிகமாக லாரிகள் அல்லது டிராக்டர்களைப் பயன்படுத்தி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

* பணியாளர் நலன்: அதிக பளுவைத் தூக்குவதால் பாதிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ் நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்கக் கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படும் நிலையில், அடிப்படை வாகன வசதி கூட இல்லாமல் பணியாளர்கள் அவதிப்படுவதும், நகரம் குப்பைக்காடாக மாறுவதும் சீர்காழி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
Embed widget