அண்ணாமலைக்கு சவால் விட்ட எம்எல்ஏ ஷாநவாஸ்... எதற்காக தெரியுமா..?
மொழிகளுக்கு நிதி ஒதுக்கியது குறித்து விவாதத்திற்கு வர அண்ணாமலை தயாரா? என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ் எம்எல்ஏ சவால் விட்டுள்ளார்.

சீர்காழி அருகே நடைபெற்ற புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் பங்கேற்ற விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஷாநவாஸ், மொழிகளுக்கு நிதி ஒதுக்கியது குறித்து விவாதத்திற்கு வர அண்ணாமலை தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்கள் மதரஸா திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி பிரமுகர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நடிகர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஷாநவாஸ் கூறுகையில்;

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முன்னுரிமை
இந்தியா அரசு 22 மொழிகளை இந்திய மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், மத்திய அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் என் முன்னுரிமை அளிக்கிறது. இந்த இரண்டு மொழிகளுக்கும் நிதி ஒதுக்கிறது. இரண்டு மொழிகளை தூக்கிப்பிடித்து கொண்டு மற்ற மொழிகளை ஓரங்கட்டுவதே ஒரு கொள்கையாக ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. மும் மொழிக் கொள்கை எப்படி ஏற்றுக் கொள்வது.
மடைமாற்றும் அண்ணாமலை
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாத அண்ணாமலை, அவர் பள்ளி நடத்துகிறார், அவர் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார், அவருக்கு குழந்தைகள் அந்த பள்ளியில் பயிலுகின்றனர். என சல்லித்தனமாக திசை திருப்பி மடைமாற்றுகிறார் அண்ணாமலை. ஒரு கொள்கை ரீதியான பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக அண்ணாமலை மாற்றுகிறார். இந்தியை திமுக மற்றும் எதிர்க்கிறதா? பாஜகவை தவிர அத்தனை கட்சிகளும் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து வருகிறது.

அன்புமணி, அதிமுகவினர் சிபிஎஸ்சி பள்ளி நடத்தவில்லையா?
அண்ணாமலை கேள்வி கேட்க வேண்டுமென்றால் அன்புமணி, அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ்சி பள்ளி நடத்தவில்லையா? அவர்களது பிள்ளைகள் வேறு மொழி படிக்கவில்லையா? ஒட்டுமொத்த தமிழகமே சேர்ந்து ஒரு கருத்தில் இருப்பது என்றால் அதை பார்க்க வேண்டும். அதை எதிர்கொள்வதற்கு துணிவில்லாமல் மடை மாற்றுவதற்கு அண்ணாமலை வேலை செய்கிறார்.
அனைவருக்கும் பொதுவான மொழி ஆங்கிலம்
மும்மொழிக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்றால், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் 22 மொழிகளில் ஒரு மொழியை வைத்தால் அது எப்படி சாத்தியம், 22 மொழிகளுக்கும் பொதுவான ஒரு மொழியான ஆங்கிலம். தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் தான்.

அண்ணாமலைக்கு சவால்
மேலும் தொடர்ந்து பேசியவர், நிர்மலா சீதாராமன் கடைசி பட்ஜெட்டில் 22 மொழிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க உள்ளார் என விவாதத்திற்கு வர அண்ணாமலை தயாராக உள்ளாரா? என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பினர். ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளனர் என வாதத்திற்கு வர தயாரா? மோசடியாக எந்த மொழியையும் மும் மொழிக் கொள்கையில் படிக்கலாம்.
முற்போக்கு விழிப்புணர்வு கொண்ட மாநிலம்
முற்போக்கான மாநிலம், விழிப்புணர்வு கொண்ட மாநிலம் எப்படி ஏமாற முடியும். தேன் தடவிய வார்த்தைகள் மூலம் மும்மொழிக் கொள்கை சொன்னாலும் அது இந்தி திணிப்பே தான் என புரிந்து கொண்ட தமிழ்நாடு ஏமாறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவான ஷாநவாஸ் பேசியுள்ளார்.






















