மேலும் அறிய

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகம்..!

சீர்காழி அருகே மின்னல் தாக்கியதில் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, நிம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட சம்புவராயன் கோடங்குடி கிராமத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோடங்கிடி கிராமத்தில் நடந்த இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அவ்வாறு பெய்து வரும் மழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சம்புவராயன் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன் என்பவரது மனைவி 45 வயதான கொளஞ்சியாள். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலில் விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் மழை வருவதைக் கண்ட கொளஞ்சியாள், வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடுகளை மழைக்கு ஒதுங்க ஓட்டி வரச் சென்றுள்ளார்.

பெண்னை தாக்கிய மின்னல் 

அப்போது, திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. வயலில் இருந்து கொளஞ்சியாள் ஆடுகளை ஓட்டி வரும்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மயங்கி விழுந்தார். இந்தக் கோரமான நிகழ்வை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கொளஞ்சியாளை காப்பாற்ற விரைந்துள்ளனர்.மின்னல் தாக்கியதில் நிலைகுலைந்த கொளஞ்சியாளை மீட்க கிராம மக்கள் முயற்சித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்து, கொளஞ்சியாளை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. மருத்துவமனையில் கொளஞ்சியாளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மின்னல் தாக்கியதன் கடுமையான தாக்கத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சோகத்தில் மக்கள் 

இந்தச் செய்தி, கொளஞ்சியாளின் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனையில் கொளஞ்சியாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். உயிரிழந்த கொளஞ்சியாளின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொளஞ்சியாள் மின்னல் தாக்கியதால் தான் உயிரிழந்தார் என்பது உறுதியானது.

நிவாரணம் குறித்த அறிவிப்பு

இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள், அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழக்கும் நபர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவி, கொளஞ்சியாளின் குடும்பத்திற்கும் கிடைக்க உரிய ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு சிறிய ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கியதற்கான காரணங்கள் மற்றும் சம்பவம் நடந்த விதம் குறித்து போலீசார் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து இந்த சம்பவத்தின் அறிக்கையை தயாரித்து, அரசின் உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

இயற்கை சீற்றங்களின் பாதிப்பு

மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. திறந்தவெளிகள், வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும்போது இடி, மின்னல் தாக்க வாய்ப்புகள் அதிகம். இடி, மின்னல் ஏற்படும்போது திறந்தவெளிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான இடங்களான வீடுகள், கட்டிடங்கள் அல்லது வாகனங்களுக்குள் தங்குவது பாதுகாப்பானது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது. இந்த துயரச் சம்பவம், இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மேலும், இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உயிர் சேதங்களை குறைக்கலாம். கொளஞ்சியாளின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget