மேலும் அறிய

போதை ஆசாமி வெறிச்செயல் - தக்காளி வியாபாரி கொடூர கொலை..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தக்காளி விலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காய்கறி கடைக்காரர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தக்காளி வாங்குவதில் ஏற்பட்ட சாதாரண தகராறு, உச்சகட்ட கொடூரத்தை அடைந்து ஒரு உயிரை பலி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் காய்கறிக் கடை உரிமையாளரைத் தாக்கி கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்பங்கூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் அதே பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று மதியம், ( டிசம்பர்-6) மாணாந்திடவாசல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் சந்திரசேகர் என்பவர், குடிபோதையில் ராஜாவின் கடைக்கு வந்துள்ளார்.

வழக்கம்போல காய்கறிகளைப் பார்வையிட்ட அவர், தக்காளியின் விலை குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். "ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் என்று ராஜா கூறியுள்ளார். விலையைக் கேட்ட சந்திரசேகருக்கும், ராஜாவுக்கும் இடையே விலை குறித்து  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், குடிபோதையில் இருந்த சந்திரசேகர் ஆத்திரமடைந்துள்ளார்.

தாக்குதலும், துயரமும்

விலை தகராறு காரணமாக ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற சந்திரசேகர், சற்றும் எதிர்பாராத விதமாக ராஜாவுடன் தகராறு செய்ததுடன், அவரைத் கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் நிலைதடுமாறிய ராஜா கீழே விழுந்துள்ளார். தரையில் விழுந்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வெள்ளத்தில் சுயநினைவை இழந்த ராஜா மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட சந்திரசேகர், தான் செய்த காரியத்தின் விபரீதத்தை உணர்ந்து, அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

சத்தம் கேட்டு காய்கறிக் கடையின் அருகே இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்து கிடந்த ராஜாவை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபமாக பிரித்த உயிர்

மருத்துவமனைக்கு ராஜாவைக் கொண்டு சேர்த்தவுடன், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தனர். ஆனால், ராஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தக்காளி விலை தகராறில் காய்கறி கடைக்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை 

இந்தச் சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி சந்திரசேகரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்டாலின் சம்பவ இடமான திருப்பங்கூர் மெயின் ரோடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், அப்பகுதி மக்களிடமும், காய்கறிக் கடை அருகே இருந்தவர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினார். விரைவில் குற்றவாளியைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை  தெரிவித்துள்ளனர்.

சோகத்தில் குடும்பம்

கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தின் ஆதாரமாக இருந்த ராஜா, ஒரு கிலோ தக்காளி விலையைக் கேட்ட தகராறில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தந்தை மற்றும் கணவரை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்தினரின் கண்ணீர் அப்பகுதி மக்களை கலங்கச் செய்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Embed widget