மேலும் அறிய

சீர்காழி அருகே கோர விபத்து: விவசாயி தலை சிதறி பலி; மனைவி வாய்க்காலில் மீட்பு! மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகே திருமுல்லைவாசல் மெயின் ரோட்டைச் சேர்ந்த தம்பதியினர் மருத்துவப் பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் சீர்காழி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். படுகாயமடைந்த அவரது மனைவி சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில், கிராம மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த விதம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் விவசாயத் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி செல்வபதி (வயது 50). இன்று (அக்டோபர் 14) காலை, இந்தத் தம்பதியினர் இருவரும் தங்கள் சொந்த இருசக்கர வாகனத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக சீர்காழியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். திருமுல்லைவாசல் - சீர்காழி மெயின் ரோட்டில் உள்ள வழுதலைக்குடி என்ற இடத்தின் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.


சீர்காழி அருகே கோர விபத்து: விவசாயி தலை சிதறி பலி; மனைவி வாய்க்காலில் மீட்பு! மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

பலியும், படுகாயமும்

பேருந்து மோதிய வேகத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் விவசாயி செல்வம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி செல்வபதி, பேருந்து மோதியதில் சாலை ஓரம் இருந்த வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மனைவி மருத்துவமனையில் அனுமதி

உயிருக்கு ஆபத்தான நிலையில் வாய்க்காலில் கிடந்த செல்வபதியை மீட்ட கிராம மக்கள், உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாசல் பள்ளிவாசல் ஆம்புலன்ஸ் வந்த பின்னர், அவர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சீர்காழி அருகே கோர விபத்து: விவசாயி தலை சிதறி பலி; மனைவி வாய்க்காலில் மீட்பு! மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

அதிவேகமே காரணம்: போலீசார் தீவிர விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் உயிரிழந்த செல்வம் அவர்களின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான முதற்கட்ட விசாரணையில், தனியார் பேருந்தின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், விபத்து நடந்தவுடன் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய தனியார் பேருந்தின் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சீர்காழி அருகே கோர விபத்து: விவசாயி தலை சிதறி பலி; மனைவி வாய்க்காலில் மீட்பு! மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற தம்பதியினரில், கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் திருமுல்லைவாசல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகள் மற்றும் இதர கனரக வாகனங்கள் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கப்படுவதால் இதுபோன்ற சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget