மேலும் அறிய

ஊருக்கு மத்தியில் வாழும் முதலை.. உயிர் பயத்தில் கிராம மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?

சீர்காழி அருகே கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பொது குளத்தில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே அமைந்துள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள பொதுக்குளம் ஒன்றில் நீண்ட நாட்களாக பெரிய முதலை ஒன்று நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் முதலை உலா வருவதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதலையைப் பிடித்துச் செல்ல வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி அருகே உலா வரும் முதலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த தண்ணீர்பந்தல் கிராமத்தின் மையப் பகுதியில், அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகாமையில் பொதுக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டாலும், அதன் மேற்பரப்பு முழுவதையும் ஆகாயத் தாமரைச் செடிகள் போர்த்தியது போல் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தச் செடிகளின் மறைவில்தான் பெரிய முதலை ஒன்று நீண்ட காலமாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் 

கடந்த பல நாட்களாக இந்தக் குளம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம், குளத்தில் இருந்து வரும் முதலை அடிக்கடி நீரின் மேற்பரப்புக்கு வந்து நீந்தியபடியே செல்கிறது. இதைத் தவிர, அவ்வப்போது கரையேறி வந்து குளத்தின் கரையோரப் பகுதியில் படுத்து உறங்குவதையும் கிராம மக்கள் நேரில் பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. தினந்தோறும் இதுபோல் முதலை நடமாடி வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்துவரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆடு மேய்க்கும் மக்கள் அச்சம்

குளத்தின் சுற்றுப்புறங்களில் வசித்து வருபவர்கள், தங்கள் கால்நடைகளை, குறிப்பாக ஆடுகளை, அருகிலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செல்லும்போது மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனுமே சென்று வருகின்றனர். எந்த நேரத்திலும் முதலை கரையேறி வந்து கால்நடைகளைத் தாக்கக் கூடும் என்ற பயம் கிராம மக்களிடையே நிலவுகிறது. இதனால், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுவோர் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே சிரமப்படுகின்றனர்.

சிறுவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை

இந்தக் கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றனர். பொதுவாக கிராமங்களில் சிறுவர்கள் குளக்கரைகள் அல்லது பொது இடங்களுக்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால், தற்போது முதலை நடமாட்டத்தால், சிறுவர்களை வீட்டை விட்டு வெளியே விடவும், பள்ளிக்குச் சென்று வரவும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் கரையில் படுத்துறங்கும் முதலை திடீரெனத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்து வருகிறது.

உள்ளூர் மக்கள் சார்பில் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "பள்ளிக்கூடம் அருகிலேயே இருப்பதால், குழந்தைகள் பாதுகாப்புதான் எங்களுக்குப் பெரிய கவலையாக உள்ளது. இந்த முதலையைப் பிடித்துச் சென்றால் மட்டுமே, எங்கள் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து விடுபட முடியும். நாங்கள் நிம்மதியுடன் வாழ வனத்துறை உடனடியாக உதவ வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

வனத்துறைக்கு அவசரக் கோரிக்கை

தண்ணீர்பந்தல் கிராமத்தின் பொதுக்குளம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். குடியிருப்புப் பகுதி மற்றும் பள்ளிக்கு அருகாமையில் வன விலங்கான முதலை உலா வருவது, கிராம மக்களின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இந்தக் கிராம மக்களின் அச்சத்தைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரை அடர்ந்துள்ள இந்தக் குளத்தில் இருக்கும் முதலையைச் சிறப்புக் குழுக்களைக் கொண்டு விரைவாகப் பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்றும், அதன் மூலம் தண்ணீர்பந்தல் கிராம மக்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
Embed widget