மேலும் அறிய

ஊருக்கு மத்தியில் வாழும் முதலை.. உயிர் பயத்தில் கிராம மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?

சீர்காழி அருகே கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பொது குளத்தில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே அமைந்துள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள பொதுக்குளம் ஒன்றில் நீண்ட நாட்களாக பெரிய முதலை ஒன்று நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் முதலை உலா வருவதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதலையைப் பிடித்துச் செல்ல வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி அருகே உலா வரும் முதலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த தண்ணீர்பந்தல் கிராமத்தின் மையப் பகுதியில், அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகாமையில் பொதுக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டாலும், அதன் மேற்பரப்பு முழுவதையும் ஆகாயத் தாமரைச் செடிகள் போர்த்தியது போல் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தச் செடிகளின் மறைவில்தான் பெரிய முதலை ஒன்று நீண்ட காலமாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் 

கடந்த பல நாட்களாக இந்தக் குளம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம், குளத்தில் இருந்து வரும் முதலை அடிக்கடி நீரின் மேற்பரப்புக்கு வந்து நீந்தியபடியே செல்கிறது. இதைத் தவிர, அவ்வப்போது கரையேறி வந்து குளத்தின் கரையோரப் பகுதியில் படுத்து உறங்குவதையும் கிராம மக்கள் நேரில் பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. தினந்தோறும் இதுபோல் முதலை நடமாடி வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்துவரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆடு மேய்க்கும் மக்கள் அச்சம்

குளத்தின் சுற்றுப்புறங்களில் வசித்து வருபவர்கள், தங்கள் கால்நடைகளை, குறிப்பாக ஆடுகளை, அருகிலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செல்லும்போது மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனுமே சென்று வருகின்றனர். எந்த நேரத்திலும் முதலை கரையேறி வந்து கால்நடைகளைத் தாக்கக் கூடும் என்ற பயம் கிராம மக்களிடையே நிலவுகிறது. இதனால், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுவோர் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே சிரமப்படுகின்றனர்.

சிறுவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை

இந்தக் கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றனர். பொதுவாக கிராமங்களில் சிறுவர்கள் குளக்கரைகள் அல்லது பொது இடங்களுக்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால், தற்போது முதலை நடமாட்டத்தால், சிறுவர்களை வீட்டை விட்டு வெளியே விடவும், பள்ளிக்குச் சென்று வரவும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் கரையில் படுத்துறங்கும் முதலை திடீரெனத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்து வருகிறது.

உள்ளூர் மக்கள் சார்பில் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "பள்ளிக்கூடம் அருகிலேயே இருப்பதால், குழந்தைகள் பாதுகாப்புதான் எங்களுக்குப் பெரிய கவலையாக உள்ளது. இந்த முதலையைப் பிடித்துச் சென்றால் மட்டுமே, எங்கள் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து விடுபட முடியும். நாங்கள் நிம்மதியுடன் வாழ வனத்துறை உடனடியாக உதவ வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

வனத்துறைக்கு அவசரக் கோரிக்கை

தண்ணீர்பந்தல் கிராமத்தின் பொதுக்குளம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். குடியிருப்புப் பகுதி மற்றும் பள்ளிக்கு அருகாமையில் வன விலங்கான முதலை உலா வருவது, கிராம மக்களின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இந்தக் கிராம மக்களின் அச்சத்தைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரை அடர்ந்துள்ள இந்தக் குளத்தில் இருக்கும் முதலையைச் சிறப்புக் குழுக்களைக் கொண்டு விரைவாகப் பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்றும், அதன் மூலம் தண்ணீர்பந்தல் கிராம மக்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget