மேலும் அறிய

மயிலாடுதுறை விவசாயிகள் கொந்தளிப்பு: நிவாரணம் வழங்காததால் ஆட்சியரிடம் வாக்குவாதம்

ஆகஸ்ட் 15 -ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கவில்லை என்றால் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் திடீரென அமளியில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முன்பு நடைபெற்ற இச்சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


மயிலாடுதுறை விவசாயிகள் கொந்தளிப்பு: நிவாரணம் வழங்காததால் ஆட்சியரிடம் வாக்குவாதம்

ஆட்சியர் முன்பு கொதித்தெழுந்த விவசாயிகள்

அப்போது கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விவசாயிகள் திடீரென எழுந்து நின்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கடந்த ஜனவரி மாதம் மாவட்டத்தில் பெய்த பருவம் தவறிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருந்ததாகவும், ஆனால், ஜூலை மாதம் முடிவடைய உள்ள நிலையிலும் இதுவரை நிவாரணம் வழங்கப்படாததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆட்சியர் முன் தர்ணா, முழக்கங்கள், வெளிநடப்பு!

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து, கூட்ட அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினர். "பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கு", "விவசாயிகளைக் காக்கத் தவறிய அரசே, திரும்பிப் பார்" போன்ற கோஷங்களால் கூட்ட அரங்கம் அதிர்ந்தது.


மயிலாடுதுறை விவசாயிகள் கொந்தளிப்பு: நிவாரணம் வழங்காததால் ஆட்சியரிடம் வாக்குவாதம்

இதனைத் தொடர்ந்து விவசாயிகளை சமாதானப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், அவரது சமாதான முயற்சிகளை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படாதது குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஒருகட்டத்தில், விவசாயிகள் கூட்ட அரங்கிலிருந்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் 

வெளிநடப்பு செய்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கடந்த ஜூன் மாதத்துக்குள் நிவாரணம் பெற்று தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்துள்ளோம்." மேலும், "அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால், மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளையும் திரட்டி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று துரைராஜ் தெரிவித்தார்.


மயிலாடுதுறை விவசாயிகள் கொந்தளிப்பு: நிவாரணம் வழங்காததால் ஆட்சியரிடம் வாக்குவாதம்

குறுவை தொகுப்பு திட்டம் குறித்தும் குற்றச்சாட்டு

நிவாரணப் பிரச்சனை மட்டுமின்றி, தமிழக அரசு அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் இதுவரை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கூட்டாகக் குற்றம் சாட்டினர். இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.


மயிலாடுதுறை விவசாயிகள் கொந்தளிப்பு: நிவாரணம் வழங்காததால் ஆட்சியரிடம் வாக்குவாதம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி, விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளையும், அரசுத் தரப்பில் உள்ள காலதாமதங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அரசுத் தரப்பில் இருந்து எந்த ஒரு சாதகமான பதிலும் வராத பட்சத்தில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டக்களமாக மாறும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசின் கவனத்தை ஈர்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கப்பெறுமா என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget