மேலும் அறிய

வடிவேல் பாணியில் புகார்! அதிர்ச்சியில் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்குமா அரசு?

பொதுமக்கள் பயன்படுத்திய கிணற்று புறம்போக்கை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து மீண்டும் கிணற்றை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பொதுமக்கள் பயன்படுத்திய கிணற்று புறம்போக்கை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து மீண்டும் கிணற்றை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

கிணறு ஊரணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சார் பதிவகம் சீர்காழி தாலுக்கா எடமணல் கிராமத்தில் உள்ள புல எண் 176/1 என்பது அரசு புறம்போக்கு சொத்து மற்றும் நீர் நிலையாகும். 'அ' பதிவேட்டில் இது கிணறு ஊரணி என்று பதியப்பட்டுள்ளது. இந்த கிணறு ஊரணி ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கிணறு ஆகும். இந்த நீர்நிலை புறம்போக்கு தெருவை ஒட்டி உள்ளது. 

பத்திரப்பதிவு 

இந்நிலையில் அந்த கிணற்றை மூடி ராமமூர்த்தி மனைவி மல்லிகா என்பவர் அதன் மீது ஒரு குடிசை வீடு கட்டி உபயோகப்படுத்தி வந்துள்ளார். அதற்கு தவறான முறையில் மின்சார இணைப்பும் பெற்றுள்ளார். கிணற்று புறம்போக்கில் வடக்கில் செந்தில்நாதன் என்பவருக்கு புல எண் 176/2A1 என்ற எண்ணில் சொத்து உள்ளது. செந்தில்நாதன் இறந்துவிட்ட நிலையில் செந்தில்நாதனின் வாரிசுகளான மனைவி விஜயலட்சுமி மகன் ஆனந்தன் மகள் பிரகல்பா ஸ்ரீ மற்றும் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர் புல எண் 176/2A1 என்ற சொத்தை எடமணல் ஆம பள்ளம் கதவிளக்கம் எண் 329/a என்ற விலாசத்தில் வசிக்கும் ராமமூர்த்தி மனைவி மல்லிகா என்பவருக்கு 14.03.2025 தேதியில் ஆவண எண் 1044/2025 கிரைய பத்திரம் மூலம் கிரையம் கொடுத்துள்ளார்கள்.

உடந்தையாக அரசு அதிகாரிகள் 

ஆனால், அப்படி கிரயம் கொடுக்கும் போது அரசு புறம்போக்கு புல எண் 176/1 ல் உள்ள குடிசையையும் சேர்த்து விற்றுள்ளார்கள். ஆனால் குடிசை கிணற்றின் மீது புறம்போக்கில் உள்ளதை மறைத்து புல எண் 176/2a1 ல் உள்ளது போல் தவறாக குறிப்பிட்டு சட்டவிரோதமாக விற்றுள்ளார்கள், மல்லிகாவும் அதை சட்டவிரோதமாக வாங்கியுள்ளார். இதற்கு சீர்காழி சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த விபரம் தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.

பொதுமக்கள் புகார் மனு

நீர்நிலை சம்பந்தமான கிரயம் செல்லாது என்பதால் ஒண்ணாவது நபர் கிரைய பத்திரத்தை ரத்து செய்து, அரசு நீர் நிலையை பாதுகாக்க வேண்டி 1,2 வது நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி சொத்தை அரசாங்கம் சார்பாக மீட்டு எடுத்து பழையபடி அங்கு ஊர் பொது கிணற்றை மீட்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக எடமணல் கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்கக்கூடாது என்றும், இதுவே தடங்கல் மனுவாக ஏற்று, அதேபோல் நீர்வள ஆதாரமான கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ள மல்லிகாவின் சொத்து வரி உட்பட எந்த வரியும் வகையறாக்களும் கொடுக்கக் கூடாது என்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், சீர்காழி வட்டாட்சியர், மாவட்ட பதிவு துறை உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

அதேபோல கிணற்று ஊரணி பகுதியினை ஆக்கிரமித்து வீடு கட்டி அதில் மின் இணைப்பு பெற்றுள்ளது மேற்படி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் மின் பகிர்மான கழகம் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க உத்திரவிட வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளனர்.

 

 

 

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget