மேலும் அறிய

வடிவேல் பாணியில் புகார்! அதிர்ச்சியில் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்குமா அரசு?

பொதுமக்கள் பயன்படுத்திய கிணற்று புறம்போக்கை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து மீண்டும் கிணற்றை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பொதுமக்கள் பயன்படுத்திய கிணற்று புறம்போக்கை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து மீண்டும் கிணற்றை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

கிணறு ஊரணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சார் பதிவகம் சீர்காழி தாலுக்கா எடமணல் கிராமத்தில் உள்ள புல எண் 176/1 என்பது அரசு புறம்போக்கு சொத்து மற்றும் நீர் நிலையாகும். 'அ' பதிவேட்டில் இது கிணறு ஊரணி என்று பதியப்பட்டுள்ளது. இந்த கிணறு ஊரணி ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கிணறு ஆகும். இந்த நீர்நிலை புறம்போக்கு தெருவை ஒட்டி உள்ளது. 

பத்திரப்பதிவு 

இந்நிலையில் அந்த கிணற்றை மூடி ராமமூர்த்தி மனைவி மல்லிகா என்பவர் அதன் மீது ஒரு குடிசை வீடு கட்டி உபயோகப்படுத்தி வந்துள்ளார். அதற்கு தவறான முறையில் மின்சார இணைப்பும் பெற்றுள்ளார். கிணற்று புறம்போக்கில் வடக்கில் செந்தில்நாதன் என்பவருக்கு புல எண் 176/2A1 என்ற எண்ணில் சொத்து உள்ளது. செந்தில்நாதன் இறந்துவிட்ட நிலையில் செந்தில்நாதனின் வாரிசுகளான மனைவி விஜயலட்சுமி மகன் ஆனந்தன் மகள் பிரகல்பா ஸ்ரீ மற்றும் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர் புல எண் 176/2A1 என்ற சொத்தை எடமணல் ஆம பள்ளம் கதவிளக்கம் எண் 329/a என்ற விலாசத்தில் வசிக்கும் ராமமூர்த்தி மனைவி மல்லிகா என்பவருக்கு 14.03.2025 தேதியில் ஆவண எண் 1044/2025 கிரைய பத்திரம் மூலம் கிரையம் கொடுத்துள்ளார்கள்.

உடந்தையாக அரசு அதிகாரிகள் 

ஆனால், அப்படி கிரயம் கொடுக்கும் போது அரசு புறம்போக்கு புல எண் 176/1 ல் உள்ள குடிசையையும் சேர்த்து விற்றுள்ளார்கள். ஆனால் குடிசை கிணற்றின் மீது புறம்போக்கில் உள்ளதை மறைத்து புல எண் 176/2a1 ல் உள்ளது போல் தவறாக குறிப்பிட்டு சட்டவிரோதமாக விற்றுள்ளார்கள், மல்லிகாவும் அதை சட்டவிரோதமாக வாங்கியுள்ளார். இதற்கு சீர்காழி சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த விபரம் தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.

பொதுமக்கள் புகார் மனு

நீர்நிலை சம்பந்தமான கிரயம் செல்லாது என்பதால் ஒண்ணாவது நபர் கிரைய பத்திரத்தை ரத்து செய்து, அரசு நீர் நிலையை பாதுகாக்க வேண்டி 1,2 வது நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி சொத்தை அரசாங்கம் சார்பாக மீட்டு எடுத்து பழையபடி அங்கு ஊர் பொது கிணற்றை மீட்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக எடமணல் கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்கக்கூடாது என்றும், இதுவே தடங்கல் மனுவாக ஏற்று, அதேபோல் நீர்வள ஆதாரமான கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ள மல்லிகாவின் சொத்து வரி உட்பட எந்த வரியும் வகையறாக்களும் கொடுக்கக் கூடாது என்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், சீர்காழி வட்டாட்சியர், மாவட்ட பதிவு துறை உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

அதேபோல கிணற்று ஊரணி பகுதியினை ஆக்கிரமித்து வீடு கட்டி அதில் மின் இணைப்பு பெற்றுள்ளது மேற்படி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் மின் பகிர்மான கழகம் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க உத்திரவிட வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளனர்.

 

 

 

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN EB Bill: 200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TVK DMK: தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்
தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
DMK EV VELU FIR CASE : எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
அசத்திய சிஎம் விஜய்.! தமிழகத்தில் களம் இறங்கிய 300 புதிய பேருந்துகள்.! எந்த எந்த வழித்தடம்.? லிஸ்ட் இதோ
அசத்திய சிஎம் விஜய்.! தமிழகத்தில் களம் இறங்கிய 300 புதிய பேருந்துகள்.! எந்த எந்த வழித்தடம்.? லிஸ்ட் இதோ
DVAC Raid: ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
DMK BJP: திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
Embed widget