மேலும் அறிய

மயிலாடுதுறை: இந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் எச்சரிக்கையாக இருங்க.. அலர்ட் செய்த ஆட்சியர்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக பலத்த கனமழை பெய்யக்கூடும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கி, மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழ்திசைக் காற்றுகளின் (Easterlies) வரவு காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை மாற்றத்தால் அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 9) இரவு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கான முக்கிய பாதுகாப்பு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்;

மின் பாதுகாப்பு: மழைக் காலங்களில் மின் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் மின் சாதனங்களை இயக்க வேண்டாம்.

கட்டிட பாதுகாப்பு: பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய கட்டிடங்களின் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விளம்பரப் பலகைகளின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும்.

விவசாயிகள் கவனிப்பிற்கு: அறுவடை செய்த மற்றும் விளைபொருட்களை மழையில் நனையாமல் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும். கால்நடைகளைத் திறந்த வெளியிலோ அல்லது மின் கம்பங்களின் அடியிலோ கட்ட வேண்டாம். அவற்றுக்குத் தேவையான தீவனங்களை முன்கூட்டியே சேமித்து வைக்கவும்.

பயணங்கள்: அவசியமற்ற வெளிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பான இடங்களில் தங்குவது நலம். குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், அங்கு செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அவசர கால உதவி எண்கள்

மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் அவசர காலப் பணிகளுக்குத் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவி அல்லது புகார்களுக்குக் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 04364-222588

கட்டணமில்லா எண்: 04364-1077

மின்சாரத் துறை (மயிலாடுதுறை): 04364-252218 / 94984 82319

சீர்காழி பகுதி: 04364-279301 / 94458 54006

மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர்  ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

உலமாக்கள் நல வாரியத்தில் திருமண, கல்வி நிதியுதவி மற்றும் ஓய்வூதியம்: ஆன்லைன் விண்ணப்ப முறை முழு விவரம்!
உலமாக்கள் நல வாரியத்தில் திருமண, கல்வி நிதியுதவி மற்றும் ஓய்வூதியம்: ஆன்லைன் விண்ணப்ப முறை முழு விவரம்!
கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
Embed widget