மேலும் அறிய

மயிலாடுதுறை: இந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் எச்சரிக்கையாக இருங்க.. அலர்ட் செய்த ஆட்சியர்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக பலத்த கனமழை பெய்யக்கூடும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கி, மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழ்திசைக் காற்றுகளின் (Easterlies) வரவு காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை மாற்றத்தால் அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 9) இரவு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கான முக்கிய பாதுகாப்பு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்;

மின் பாதுகாப்பு: மழைக் காலங்களில் மின் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் மின் சாதனங்களை இயக்க வேண்டாம்.

கட்டிட பாதுகாப்பு: பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய கட்டிடங்களின் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விளம்பரப் பலகைகளின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும்.

விவசாயிகள் கவனிப்பிற்கு: அறுவடை செய்த மற்றும் விளைபொருட்களை மழையில் நனையாமல் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும். கால்நடைகளைத் திறந்த வெளியிலோ அல்லது மின் கம்பங்களின் அடியிலோ கட்ட வேண்டாம். அவற்றுக்குத் தேவையான தீவனங்களை முன்கூட்டியே சேமித்து வைக்கவும்.

பயணங்கள்: அவசியமற்ற வெளிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பான இடங்களில் தங்குவது நலம். குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், அங்கு செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அவசர கால உதவி எண்கள்

மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் அவசர காலப் பணிகளுக்குத் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவி அல்லது புகார்களுக்குக் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 04364-222588

கட்டணமில்லா எண்: 04364-1077

மின்சாரத் துறை (மயிலாடுதுறை): 04364-252218 / 94984 82319

சீர்காழி பகுதி: 04364-279301 / 94458 54006

மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர்  ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...
மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...
மயிலாடுதுறையில் பயங்கரம்: 9 நாள் குழந்தையுடன் வந்த காதல் தம்பதி மீது தாக்குதல் - மாமனாருக்கு விலா எலும்பு முறிவு!
மயிலாடுதுறையில் பயங்கரம்: 9 நாள் குழந்தையுடன் வந்த காதல் தம்பதி மீது தாக்குதல் - மாமனாருக்கு விலா எலும்பு முறிவு!
Mayiladuthurai Power Shutdown (16.05.2026) :கவனம் மக்களே! மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (மே 16) மின்சாரம் கிடையாது: எந்தெந்த பகுதிகள் தெரியுமா..?
Mayiladuthurai Power Shutdown (16.05.2026) :கவனம் மக்களே! மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (மே 16) மின்சாரம் கிடையாது: எந்தெந்த பகுதிகள் தெரியுமா..?
மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு : மே 21-ல் ஆய்வுக்கு வராத விசைப்படகுகளுக்கு 'செக்' - உரிமம் நீக்கம், டீசல் மானியம் கட்!
மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு : மே 21-ல் ஆய்வுக்கு வராத விசைப்படகுகளுக்கு 'செக்' - உரிமம் நீக்கம், டீசல் மானியம் கட்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
CM Vijay Condemn: “விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
“விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்
PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்
" ஆம்பளன்னா அப்படித் தான் இருப்பாங்க " - மாமியார் பேச்சால் மனமுடைந்த இளம் பெண் எடுத்த முடிவு
Tata Punch EMI: டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார லோன்ல வாங்குற ஐடியா இருக்கா.? மாத EMI எவ்வளவு வரும்.? பிளான் இதோ
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார லோன்ல வாங்குற ஐடியா இருக்கா.? மாத EMI எவ்வளவு வரும்.? பிளான் இதோ
Embed widget