மேலும் அறிய

ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவ பயனாளிகளுக்கு ₹ 60,000 மானியம்! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவப் பயனாளிகளுக்கு, ஜெருசலேம் புனிதப் பயண மானியத் திட்டத்தில் வழங்கப்பட உள்ள நிதியுதவி விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவப் பயனாளிகளுக்கு, ஜெருசலேம் புனிதப் பயண மானியத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயணத்தை நவம்பர் 1, 2025-க்குப் பிறகு மேற்கொண்டவர்கள், அதற்கான மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மானிய விவரங்கள்

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த மானியத் திட்டத்தின் கீழ், மொத்தம் 600 கிறித்தவப் பயனாளிகள் பயன்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மானியம், 'ECS' (மின்னணுப் பரிவர்த்தனை சேவை) முறையில் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும்.

மானியம் வழங்கப்படும் விவரங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  • பொதுப் பயனாளிகள்: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவப் பயனாளிகளுக்கு, நபர் ஒருவருக்கு ₹37,000/- வீதம் மானியம் வழங்கப்படும்.
  • அருட்சகோதரிகள்/கன்னியாஸ்திரிகள்: 

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு, நபர் ஒருவருக்கு ₹60,000/- வீதம் சிறப்பு மானியம் வழங்கப்படும்.

இந்தப் பயணத்தை 01.11.2025 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ மேற்கொண்ட கிறித்தவ மதப் பயனாளிகளிடம் இருந்தே தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்கள் பெறுவது எப்படி?

மானியம் பெற விரும்பும் தகுதியுடைய கிறித்தவப் பயனாளிகள், விண்ணப்பப் படிவங்களை இரண்டு வழிகளில் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம்:

  • நேரடியாகப் பெறுதல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆகியவற்றில் நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • இணையதளம் மூலம் பதிவிறக்கம்: தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.bcmbcmw.tn.gov.in என்ற தளத்தில் இருந்தும் விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான மேலும் விவரங்களை அறிந்துகொள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள் மற்றும் முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன், புனிதப் பயணம் மேற்கொண்டதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் இதர தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களைப் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.02.2026 (பிப்ரவரி 28, 2026).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

* ஆணையர்,

* சிறுபான்மையினர் நலத்துறை,

* கலசமஹால் பாரம்பரிய கட்டடம்,

* முதல் தளம், சேப்பாக்கம்,

* சென்னை-600 005.

ஆவணத் தேவைகள் மற்றும் முக்கிய குறிப்புகள்

மானியத்தைப் பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றுகள், புனிதப் பயணம் மேற்கொண்டதற்கான பயண ஆவணங்கள் (பாஸ்போர்ட் நகல், விசா, பயணச்சீட்டுகள்) மற்றும் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.

இந்தத் திட்டம், தமிழக அரசு சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு உயர்த்தப்பட்ட மானியம் வழங்கப்படுவது, அவர்களின் சமூகச் சேவையை அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

தகுதியுடைய கிறித்தவப் பயணிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மானியத்தைப் பெறச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி உரிய காலத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Embed widget