மேலும் அறிய

சம்பா சாகுபடிக்கு ஆபத்து! மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்டுத்துளைப்பான், புகையான் தாக்குதல் - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் உடனடியாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு ஆகியவற்றின் தாக்குதல்களும், உவர் தன்மையினால் பாசி வளர்ச்சியும் தென்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் உடனடியாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மாறி வரும் தட்பவெப்பநிலையால் பாதிப்பு

தமிழ்நாட்டில் மாறி வரும் தட்பவெப்பநிலை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் ஒருசில இடங்களில் தண்டுத்துளைப்பான், புகையான் மற்றும் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்கள் தென்படுகின்றன.

இந்தத் தாக்குதலின் அறிகுறிகள் பின்வருமாறு:

 * தண்டுத்துளைப்பான் தாக்குதல்: இளம்பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடுதல் மற்றும் நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண்கதிர்களாகக் காணப்படுதல்.

* இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்: நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து, பச்சையத்தை சுரண்டி விடுவதால் இலைகள் வெண்மையாகக் காணப்படுதல்.

 * புகையான் தாக்குதல்: தாக்கிய பயிர்கள் காய்ந்து “பயிர் தீய்ந்தது” போன்ற அறிகுறிகள் தென்படுதல்.

* பாசி வளர்ச்சி: உவர் தன்மையினால் சில இடங்களில் நெல் வயல்களில் பாசி வளர்ச்சி ஏற்பட்டு, பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்படுதல்.

கூட்டு வயல் ஆய்வு மற்றும் அறிவுரைகள்

நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கீழ்வேளூர் விஞ்ஞானி, வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டாக வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதர இடங்களிலும் பொருளாதார சேதநிலை குறித்து வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள்

எனவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக வட்டார வேளாண் அலுவர்களைத் தொடர்புகொண்டு பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு முறைகள்

1. தண்டுத்துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்த:

 * ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP 400 கிராம் என்ற அளவில் தெளிக்கலாம்.

2. புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த:

 * ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50% WG 120 கிராம், குளோதையானிடின் 50% WG 8-9.6 கிராம், டினோடிபியூரான் 20% SG 60-80 கிராம் அல்லது பிப்ரோனில் 5% SC 400 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.

3. நெல் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த:

 * ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் அல்லது புளுபென்டியமைடு 20% w/wsc 20 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரடு 50% SP 400 கிராம் அல்லது குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC 60 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.

4. பாசி வளர்ச்சியைத் தடுக்க மற்றும் பயிர் வளர்ச்சியை மேம்படுத்த:

 * வயல்களில் பாசி படர்ந்திருந்தால், ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 20 கிலோ மணலுடன் கலந்து, தண்ணீர் பாயக்கூடிய 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்க வேண்டும்.

* ஏக்கருக்கு 1 கிலோ 19:19:19 காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாகத் தெளித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்திடவும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை

மேலும், விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுந்தாள் உரப்பயிர்களைப் பயன்படுத்தவும், யூரியா, டிஏபி போன்ற உரங்களைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதைத் தவிர்த்து பயிர்சுழற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சம்பா மகசூலை இழப்பின்றிப் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
OPS: அதிமுக-வும் போச்சு.. ஆதரவும் போச்சு.. ஓ.பி.எஸ்.சின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஓர் அலசல்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Ajith Seeman: “நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
“நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
Embed widget