மேலும் அறிய

Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம்

சீர்காழி அருகே செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி நான்கு மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் பிரதான சாலையோரம் அரசு மதுபானகடை அமைந்துள்ளது.  இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.  மேலும், அரசு உயர் நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடனே இப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். 


Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம்

எனவே பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் திருமுல்லைவாசல், வழுதலைக்குடி உள்ளிட்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து அரசு மதுபான கடை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடையை முற்றுகையிட்ட அவர்கள்  முயன்றனர் அப்போது அங்கு குவிக்க பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தினர். ஆனால் அதற்கு கட்டுப்படாமல் அந்த தடுப்புகளை தூக்கியெறிந்து மீறி கடையை முற்றுகையிட்ட முயன்றனர்.

TNHRCE Recruitment: கம்யூட்டர் பயன்படுத்த தெரியுமா? நாகப்பட்டினம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேலை - முழு விவரம்!


Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம்

அவர்களை கடை வாசலில்  காவல்துறையினர் போராடி தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் 200 -க்கும் மேற்பட்டோர் பழையார் சீர்காழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சீர்காழி - திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வருவாய்துறை உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுயாக தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். 

Pongal Special Bus: பொங்கல் முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம்

மேலும் நீண்ட நேரம் கடந்தும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வராததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கான மதிய உணவை சாலையிலேயே அடுப்பு அமைத்து சமைக்க துவங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார், டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தையின் முடிவில் வரும் பிப்ரவரி மாதம் 20 -ஆம் தேதிக்குள் அரசு மதுபான கடை இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

CM Stalin Speech: எப்போதும் மக்களை பற்றிதான் நினைப்பு, என்னை பற்றி அல்ல - அயலகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் உரை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget