மேலும் அறிய

Lok sabha election 2024: மயிலாடுதுறை வேட்பாளரை போலீஸ் வைத்து காங்கிரஸ் தேடுகிறது - ஓ.எஸ்.மணியன் கிண்டல்

மயிலாடுதுறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்?

இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுப்பட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவான நிலையில் இன்னும் தமிழகத்தில் இரண்டு தொகுதியில் வேட்பாளர் யார்? என்பதை வெளியிடவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே மீதம் உள்ள நிலையில் இன்று வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Lok sabha election 2024: மயிலாடுதுறை வேட்பாளரை போலீஸ் வைத்து காங்கிரஸ் தேடுகிறது - ஓ.எஸ்.மணியன் கிண்டல்

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:

இந்நிலையில் மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக நிர்வாகிகள் வேட்பாளர் பாபுவிற்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில்,


Lok sabha election 2024: மயிலாடுதுறை வேட்பாளரை போலீஸ் வைத்து காங்கிரஸ் தேடுகிறது - ஓ.எஸ்.மணியன் கிண்டல்

முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் 

காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளரை போலீஸ் வைத்து அக்கட்சியினர் தேடிக் கொண்டு இருக்கின்றனர், இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை, வேட்பாளர் டெல்லியில் இருந்து வருகிறாரா? அல்லது பாம்பேவில் இருந்து வருகிறாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி இளைஞர்கள் அதிகமாக இருக்கக்கூடிய கட்சி என்றும், நாட்டில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொண்டது கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தான், ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது, அவர்களின் கோஷம் அனைத்தும் ஸ்டாலின் வாழ்க மற்றும் திமுக வாழ்க என்று மட்டுமே உள்ளதாக விமர்சித்தார்.


Lok sabha election 2024: மயிலாடுதுறை வேட்பாளரை போலீஸ் வைத்து காங்கிரஸ் தேடுகிறது - ஓ.எஸ்.மணியன் கிண்டல்

அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு நம்மை ஏமாற்றியது கூட பரவாயில்லை. ஆனால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்படும் உட்பட பல்வேறு பொய் வாக்குறுதிகளை அவர்களிடம் தெரிவித்து திமுக அரசு ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார். அதன் விளைவாக தற்போது எங்கு பார்த்தாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் , மின் ஊழியர்கள் உள்ளிட்டோரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டம் செய்தவர்களை அழைத்து அவர்களது நாக்கில் தேன் கூட இந்த அரசு வைக்கவில்லை, மாறாக பால்டாயில் மட்டும் தான் ஊற்றவில்லை என தெரிவித்தார்.


Lok sabha election 2024: மயிலாடுதுறை வேட்பாளரை போலீஸ் வைத்து காங்கிரஸ் தேடுகிறது - ஓ.எஸ்.மணியன் கிண்டல்

அதிமுக நிர்வாகிகள் காப்பு கட்டி கொள்ள வேண்டும் 

மேலும் நிர்வாகிகள் தங்களது வீடுகளில் எடப்பாடி பழனிச்சாமியை நினைத்து காப்பு கட்ட வேண்டும் எனவும், தேர்தல் முடியும் வரை வெளியூருக்கு எங்கும் செல்லாமல் தீவிரமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தேர்தல் முடிந்த பிறகு அந்த வெற்றியை பழனிச்சாமிக்கு கொடுத்துவிட்டு பழனியாண்டவர் கோயிலில் காப்பை அவிழ்த்து விட்டு வர வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget