மேலும் அறிய

ஆபாச வீடியோ ஆடியோ வழக்கு: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் வாரணாசியில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

பழமையான தருமபுரம் ஆதீனத்திருமடம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழைமையான தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக அவருடைய சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


ஆபாச வீடியோ ஆடியோ வழக்கு: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

9 பேரும் மீது வழக்குபதிவு 

அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ், செம்பனார்கோயில் தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தருமபுரம் ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்படாததால் போலீசார் குறறப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.


ஆபாச வீடியோ ஆடியோ வழக்கு: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

ஜாமீனில் விடுதலை 

புகாரை அடுத்து ஆதீனத்தில் நேர்முக உதவியாளர் செந்தில் ஆதீனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்ததால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் 90 நாட்கள் சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவிக்கப்பட்டனர்.


ஆபாச வீடியோ ஆடியோ வழக்கு: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

ஜாமீன் மறுப்பு 

இந்நிலையில் நேற்று தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் முதல்முறையாக முன்ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி செந்திலை கைது செய்து நீண்ட விசாரணை செய்தால்தான் வழக்கு முடிவடையும் என்று அரசு தரப்பில் வாதிட்டதை ஏற்று நீதிபதி செந்திலின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.


ஆபாச வீடியோ ஆடியோ வழக்கு: தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் கைது

இந்த சூழலில் 4 மாத காலமாக செந்திலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற தனிப்படை போலீசார் தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை கைது செய்துள்ளனர். முன்னதாக ஆதீனகர்த்தரின் நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய இருவர் எந்த தவறும் செய்யவில்லை தவறுதலாக குறிப்பிட்டதாக புகார் அளித்த ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனித்தனியாக அனுப்பிய கடிதம் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரை மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கடிதம் வழங்கியதாக விருத்தகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Breaking News LIVE:தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Embed widget