மேலும் அறிய

அலுவலகத்தில் விஷப்பாம்பு! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்: லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்..!

மயிலாடுதுறை அருகே அலுவலகத்தில் புகுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட செம்பனார்கோவில் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சுமார் ஆறடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பீதியடைந்து அலுவலகத்தை விட்டு அலறியடித்து வெளியேறிய சம்பவம் இன்று நிகழ்ந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினர், மிகுந்த லாவகத்துடன் அந்த விஷப் பாம்பை உயிருடன் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விடுவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அலுவலக ஊழியர்களிடையே சிறிது நேர பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

அலுவலகத்தில் அனகோண்டாவா..?

செம்பனார்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம், உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் அலுவலகப் பணிகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது அப்போது, அலுவலகத்தின் உள்ளே இருந்த அலமாரியின் கீழ்ப்பகுதியிலோ ஒரு மறைவான இடத்தில் அசைவு தெரிந்துள்ளது. இதனை முதலில் கவனித்த ஊழியர் ஒருவர், அங்கிருப்பதை உற்றுப் பார்த்தபோது, அது கருநாக பாம்பு என்று அழைக்கப்படும் கொடிய விஷமுள்ள பாம்பு என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தார்.

அந்தப் பாம்பு சுமார் ஆறடி நீளத்திற்கும் மேல் இருந்ததாகவும், அதன் தோற்றம் அச்சமூட்டும் வகையில் இருந்ததாகவும் நேரில் பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர். பாம்பு உள்ளே இருப்பதை அறிந்ததும், அலுவலகத்தில் பணிபுரிந்த மற்ற ஊழியர்கள் பதற்றத்துடன் ஒருவரை ஒருவர் எச்சரித்து, தங்கள் உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சற்றும் தாமதிக்காமல் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். பாம்பின் விஷத்தன்மை அறிந்திருந்ததால், அலுவலகம் உடனடியாகக் காலியானது.

தீயணைப்புத் துறைக்கு  அழைப்பு

ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர், நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் அளித்தனர். கொடிய விஷமுள்ள பாம்பு என்பதால், அதனைப் பிடிப்பதில் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒரு குழுவை செம்பனார்கோவிலுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்தனர்.

தகவல் கிடைத்தவுடன், மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையின் கீழ், நன்கு பயிற்சி பெற்ற மற்றும் பாம்பு பிடிக்கும் அனுபவம் கொண்ட தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழு உடனடியாக செம்பனார்கோவிலுக்குப் புறப்பட்டு வந்தனர்.

நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஊழியர்கள்

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அலுவலகம் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. வெளியே திரண்டிருந்த ஊழியர்கள் மிகுந்த பயத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்தனர். முதலில், தீயணைப்பு வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், தொழில்முறை அணுகுமுறையுடனும் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து பாம்பின் இருப்பிடத்தை அடையாளம் கண்டனர்.

அந்த பாம்பு அலுவலகத்தின் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்களில் ஒருவர், தனது சிறப்பு உபகரணங்களான நீண்ட கொக்கி மற்றும் பாம்பு பிடிப்பதற்கான கவசங்களைப் பயன்படுத்தி, மிகக் கவனமாக அந்தப் பாம்பை வெளியே கொண்டு வர முயற்சித்தார். கொடிய விஷமுள்ள பாம்பு என்பதால், அதனைப் பிடிக்கும் பணியில் சிறிதளவு பிசிறு ஏற்பட்டாலும், அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும். என்பதால் 

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தில், தீயணைப்பு வீரர் தனது அசாத்தியத் துணிச்சலையும், திறமையையும் பயன்படுத்தி, சுமார் ஆறடி நீளமுள்ள அந்த கொடிய விஷ பாம்பைக் காயப்படுத்தாமல் லாவகமாகப் பிடித்து, பாதுகாப்பான பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்தார்.

பாம்பைப் பத்திரமாக மீட்ட பின்னர், தீயணைப்புத் துறையினர் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான வனப் பகுதியில் விடுவிப்பதற்காக எடுத்துச் சென்றனர்.

பாம்பு பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட அலுவலக ஊழியர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நிறுவனத்தின் பொறுப்பாளர்கள், உயிரைப் பணயம் வைத்து இந்த ஆபத்தான மீட்புப் பணியை வெற்றிகரமாக முடித்த தீயணைப்புத் துறையினருக்குத் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்தச் சம்பவம், பருவமழை காரணமாகவும், குப்பைகள் தேங்குவதாலும் நகர்ப்புறங்களில் பாம்புகள் நுழைவது அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்கள் பீதியடையாமல், உடனடியாகத் தீயணைப்புத் துறையினரைத் தொடர்பு கொண்டு உதவி நாட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Embed widget