மேலும் அறிய

"அரசு அதிகாரிக்கே இந்த நிலையா? மயிலாடுதுறையில் பெண் DRO-வுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!" 

மயிலாடுதுறை அருகே நில விவகாரத்தை ஆய்வு செய்ய வந்த பெண் மாவட்ட வருவாய் அலுவலரை ஆபாசமாகத் திட்டி, தாக்க முயன்ற திமுக மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி மீது போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசு நில விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய வந்த மாவட்ட வருவாய் அலுவலரை (டி.ஆர்.ஓ) ஆபாசமாகத் திட்டி, தாக்க முயன்ற திமுக மாவட்ட துணைச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பின்னணி என்ன?

மயிலாடுதுறை அடுத்த ஜி.வி.எம் நகரில் வசித்து வருபவர் ரேவதி. இவரது கணவர் தியாகராஜன் வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2011ஆம் ஆண்டு, பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெருவில் உள்ள சுமார் 10,000 சதுர அடி நிலத்தில், 1,000 சதுர அடி நிலத்தை ஜெயலட்சுமி என்பவரிடம் இருந்து ரேவதி முறைப்படி கிரயம் பெற்றுள்ளார். இதற்கிடையில், பட்டமங்கலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய திமுக மாவட்ட துணைச் செயலாளருமான செல்வமணி என்பவர், ரேவதிக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ரேவதி தனது 1,000 சதுர அடி நிலத்தை அளவீடு செய்து, சர்வே கல் நடுவதற்கு முற்பட்ட போதெல்லாம், செல்வமணி தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.

அதிகாரியை முற்றுகையிட்டு மிரட்டல்

இந்நிலையில், பட்டமங்கலம் ஊராட்சியில் நேற்று தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் (DRO)  பூங்கொடி வருகை தந்திருந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட ரேவதி தரப்பில் இருந்து நில ஆக்கிரமிப்பு மற்றும் அளவீடு செய்வது தொடர்பாக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, உண்மை நிலவரத்தைக் கண்டறியும் பொருட்டு, சர்ச்சைக்கோரிய அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரசு அதிகாரி நிலத்தை ஆய்வு செய்வதைக் கண்டு ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் செல்வமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென அங்கு திரண்டனர். அதிகாரியின் ஆய்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த செல்வமணி, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடியை அரசு அதிகாரி என்றும் பாராமல், பொதுவெளியில் மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, ஆக்ரோஷமாகத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், சலசலப்பும் ஏற்பட்டது.

ஆட்சியர் தலையீடு - போலீஸ் அதிரடி நடவடிக்கை

திமுக பிரமுகரின் இந்த அராஜகப் போக்கினால் அதிர்ச்சியடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, உடனடியாக இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்  கவனத்திற்கு கொண்டு சென்றார். பெண் அதிகாரி ஒருவருக்குப் பணி பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்தும், அரசியல் பிரமுகரின் அச்சுறுத்தல் குறித்தும் விவரித்தார். இதைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்த நபர் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், பட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) சதீஷ், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்படி புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு மற்றும் விசாரணை

கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை காவல்துறையினர் அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திமுக மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள செல்வமணியைப் பிடிப்பதற்கும், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்கட்சி பிரமுகர் ஒருவர், மாவட்டத்தின் முக்கியப் பெண் அதிகாரியைத் தாக்க முயன்ற சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Embed widget